முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!
பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.
வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.
நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.
இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!
ஓகுஸ், டென்மார்க்.
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!
பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.
வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.
நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.
இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!
பா ஆக்கம் வேதா.
இலங்காதிலகம்.ஓகுஸ், டென்மார்க்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen