Social Icons

Dienstag, 18. Oktober 2016

யேர்மனி வூப்பர் கலைமாலை 2016- சிறப்பாக நடந்தேறியது

வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்கை அம்பாள் ஆலய வளர்சிக்கு உதவிடுவேரே மீண்டும் உங்கள் கரம் உயர்த்தி அதன் வளர்ச்சிக்கு தோள்கொடுத்தியுள்ளது   மட்டுமல்ல எமது கலைஞர்களை ஊக்கிப்பதர்க்கும் அத்தோடு ஆலய வளர்ச்சிக்கும் உங்களின் வருடாந்த இணைவான யேர்மனி வூப்பர் கலைமாலை2016சிறப்பாக நடந்தேறியதர்கு உங்கள் ஒத்துழைப்பே காரணமாக இருந்தது,
உங்களின் ஆண்டுதோறும் இந்த பங்களிப்பு தொடரவேண்டும்  என்பதையும்  அடுத்த ஆண்டு நிகழ்வைசிறப்பிக்க உங்களை அன்புடன் அழைப்போம் வாருங்கள் வந்து சிறப்பியுங்கள்  என வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்கை அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்,ஆலயம் இல்லை என்ற குறையை ஆண்டவன் துனையுடனும் பத்தர்கள் ஆதரவுடனும் சிறந்து நிற்கும் இந்த ஆலயத்தின்
சிறப்புக்கு அம்மன் அருளே காரணம் அவள் துணை இன்றி அனுவும் அசையாது என்று அவள் அடிதொழுவோம் அனைத்தும் வாழ்வில் சிறக்க





















யேர்மனி எசன் தமிழர் கலாச்சார நற்பணிமன்றத்தின் 31 வது ஆண்டு வாணிவிழா நிழல்படங்கள்

யேர்மனி எசன் தமிழர் கலாச்சார நற்பணிமன்றத்தின் 31 வது ஆண்டு வாணிவிழா கலைமாலை 15,10.2016 அன்று வெகு சிறப்பாக மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் ,சிறுவர் சிறுமியர் பட்டாளங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.நடனம்,தமிழிசை,வயலினிசை,

வீணையிசை,மிருதங்க இசை,சுரத்தட்டு வாத்திய இசை,பெற்றோர்கள்,,குழந்தைகள் இணைந்து வழங்கிய நாடகம்,என பல்சுவை நிகழ்வுகள் இடம் பெற்றன.விழாவுக்கு வருகை தந்து சிறப்புரையாற்றி வாழ்த்திய நகர பிதா மதிப்புக்குரிய ரூடொல்ஃப் ஜெலினெக் அவர்களுக்கும் , மணிக்கிறாம் நிறுவனத்துக்கும் எங்கள் நன்றிகள்.நிகழ்வுகளை தந்து உதவிய நடன ஆசிரியைகளுக்கும்,நாடகம், மற்றும் ஏனைய ஆக்கதாரர்களுக்கும், விழா சிறக்க ஒத்துழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள். மண்டபம் போதாமை அறிவோம் பொறுத்தருள்க,,அடுத்துவரும் நிகழ்வுகளில் கவனம் கொள்வோம். இந்த வருடம் பிள்ளைகளின் வேண்டு கோளுக்கு எற்ப அவர்களுக்கான நினைவுப் பரிசுக்கான தொகையை,தாயகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு அந்தநிதியையும்,பார்வையாளர்கள் தந்த அன்பளிப்பையும் இணைத்து மேடையில் வைத்தே
வழங்கப்பட்டது.குறிப்பிடத்தக்கது.இந்த முன்மாதிரியை,நிகழ்த்திய குழந்தைகளுக்கும்,மன்றத்தினருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
எதிர்கலச்சந்ததிகளை ஊக்குவிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.நன்றிகள்.
செய்திப்பிரிவு-படங்கள். தமிழருவி. நயினை விஜயன்.









































Disqus Shortname

Comments system

 
Blogger Templates