Social Icons

Freitag, 23. Dezember 2016

கரிசல் காட்டு கரும்புப் பூவ!கவிதை கவித்தென்றல் ஏரூர்

தென்றல் வீசும் வேளையிலே - கவித்
தெம்மாங்கு பாடிவந்தேன் சோலையிலே
தென்னங்கீற்று கிளிபோல
தேடி வந்தேன் நான் மாலையிலே

பத்த வைச்ச வாழையில போல
பத்தினியா நானிருக்கேன்யா காள
பாசம் வைத்து வாடுதுய்யா உன் பாவை
பாவம் பார்க்க தோணலியா உன் பார்வை

எத்தனை நாள் காத்திருக்கேன்
ஏங்கி ஏங்கி பாத்திருக்கேன்
என்னுசுர தாங்கிருக்கேன்
எந்நேரமும் உன் நினப்பில் தானிருக்கேன்

கிழக்கப் பார்த்து போறீயே
கிறுக்கா நானும் இருக்கேனே
சிறுக்கி என்னை பாத்தாலே
சீவன் என்னுடலில் இருக்குமே

எட்டி எட்டி உதைக்கிறது
இரவில் வந்து உன் நினப்பு
இருட்டில் நானும் துடிக்கிறேனே
என்ன இது உன் குறும்பு

கரடு முரடு மனசா உனக்கு
கரும்பா மாத்த என்னை உருக்கு
கழனிக் காட்டில் என்ன இருக்கு
கரும்புச் சாறா தாறேன் உனக்கு

கொலுசு சத்தம் கொல்லுதென்ன
கொழுவிருக்க எண்ணுதுன்ன - இந்த
கரிசல் பூவ பாரு பச்சமண்ணே
கரிசனையா வந்து சேரு ஆசை மச்சானே
 

Sonntag, 11. Dezember 2016

யார் இந்த ரோஜா....?கவிதை பொத்துவில் அஜ்மல்கான்

இதழோடு இதழ்
உரசிக் கொண்ட போது
பூர்வ ஜெம்ம ஞாபகங்கள்
என் உள் நொஞ்சில்
வந்தது.
என் பூர்வ ஜெம்மத்தில்
பூத்துக்கிடந்த காதலின்
ஞாபகம் என் மீது
ஓடியாது.
யார் இந்த ரோஜா
என்று பார்த்தால்
உன்னை என்று பித்துப் பிடிதவனாய் கூறுகின்றது
என் உள்ளம்
என்ன மாயம் பல
முறை வரமடுத்தது நம்
காதல் என்று அறியாமல்
தோடுகிறேன்.
ஆக்கம் பொத்துவில் அஜ்மல்கான்

Samstag, 10. Dezember 2016

இதயமே...! கவிதை நெடுந்தீவு தனு

கண் பார்க்கும் என்னவளே
மண் பார்த்து மெல்ல நட
உன் உதட்டு சிரிப்பாலே
என் இதயம் நகருதடி...

கட்டை விறகு கவனமடி
மட்டை தாண்டி தூக்கி வீசு
காடு மேடு கடந்திருப்பாய்
கால கொஞ்சம் நீட்டித் தூங்கு...

கை வளையல் ஓசையிலே
தை வருவதும் இதுதானோ
வளை புருவ நெற்றியிலே
விதை முளைப்பதும் அழகு புள்ள...

மனசோரம் எனை வைச்சு
தவிப்போடு இருப்பவளே
உனதருகில் நானிருந்து
தந்திடவா என் நகலை...

தலையிலே துணிவைச்சு
சாலை நோக்கி வருபவளே
காலையிலே நானும் வருவேன்
மாலைக்குள்ளே மணந்திடுவோம்...

ஆக்கம்  

நெடுந்தீவு தனு 

Freitag, 9. Dezember 2016

கனவுகளும் கவிதை படிக்கும்..!கவிதை கவித்தென்றல் ஏரூர்

என்னை சிறை பிடித்தது
நீ மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்

நான் சொல்ல
நினைப்பதெல்லாம்
எந்தன் இந்த எழுத்துகள் தான்

என் சொந்தம்
என்று சொல்வேன்
உன் ஒருவனைத் தான்

கனவுகளும் கவிதை படிக்கும்
உன் நிழலில் நின்று
என் உயிரும் அடம் பிடிக்கும்
என்னில் நீயே என்று

ஒவ்வொரு பொழுதுகளும் கனக்கிறது
உன்னை எண்ணி எண்ணி
உன் நினைவுகள்
என்னை தின்று குடிக்கிறது
உண்மைச் சொல்லி

விழிகளில் நிறைந்தவனே
எந்தன் வலிகளை மறைக்கிறேன்
ஒரு விடை தருவாயா நீ
என் உணர்வுகள்
உயிர் பெற வருவாயா நீீ

என்னை சிறை பிடித்தது
நீ மட்டும் அல்ல
உன் நினைவுகளும் தான்

நான் சொல்ல
நினைப்பதெல்லாம்
எந்தன் இந்த எழுத்துகள் தான்

என் சொந்தம்
என்று சொல்வேன்
உன் ஒருவனைத் தான்

கனவுகளும் கவிதை படிக்கும்
உன் நிழலில் நின்று
என் உயிரும் அடம் பிடிக்கும்
என்னில் நீயே என்று

ஒவ்வொரு பொழுதுகளும் கனக்கிறது
உன்னை எண்ணி எண்ணி
உன் நினைவுகள்
என்னை தின்று குடிக்கிறது
உண்மைச் சொல்லி

விழிகளில் நிறைந்தவனே
எந்தன் வலிகளை மறைக்கிறேன்
ஒரு விடை தருவாயா நீ
என் உணர்வுகள்
உயிர் பெற வருவாயா நீீ

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

Sonntag, 4. Dezember 2016

தன்மானமே தமிழ் மானம்...!கவிதை கவிப்புயல் இனியவன்

ஏன் இந்த மாற்றம்........?
யார் தூண்டிய மாற்றம்.....?
மாற்றம் என்பது தேவையே.....
வாழ்க்கையின் முன்னேற்றத்தை.....
ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை......
வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை......
உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........?

பூட்டன் காலத்தை நோக்கு........
படிப்பறிவு கிடையாது ........
பட்டறிவே பெரும் படிப்பு .......
பட்டறிவை வைத்தபடி..........
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்......
அனுபவத்தால் வாழ்க்கையை......
அனுபவித்த அனுபவசாலிகள்.........!!!

பாட்டன் காலத்தை நோக்கு......
படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்.....
சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்.......
படிகாத  மேதைகள் என்று வாழ்ந்து.......
கட்டிய அறிவாளிகள்...........!!!

தந்தையின் காலத்தை நோக்கு......
கண்விழித்து படித்து தன்னையும்.....
தன் தங்கைகளையும் வாழவைத்து......
வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய.......
உழைக்கும் உழைப்பாளி..................!!!

மகனே நீ என்ன செய்கிறாய்.......?
பூட்டனின் நன்மதிப்பை.......
பாட்டனின் சொத்தை........
தந்தையின் தியாகத்தை......
தாயின் ஏக்கத்தை................
உடன் பிறப்பின் மானத்தை................
அழித்து கொண்டிருக்கிறாய்.............!!!

மகனே நீ தவறானவன் அல்ல......
தூண்டுதலால் துரோகம் போகிறாய்.........
தூண்டுபவனை துண்டித்துவிடு......
தூண்டுபவனின் துரோகத்தை கண்டுகொள்.........
மாயதூக்கத்திலிருந்து விழித்துகொள்.......
தமிழும் தமிழ் பண்பாடும்.......
வீரத்தையும் தியாகத்தையும் விதைத்தது.....
அவை விருட்சமாய் வளர்கிறது......
நீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு.....!!!



ஆக்கம் கவிப்புயல் இனியவன்
 

உறுதியாய் நின்ற விழுதினில்*கவிதைஈழத் தென்றல் *

படர்ந்து நின்ற பாரிய மரத்தின் விழுதுகள்
நின்றன உறுதியாய் நிஜம் நாங்களென
மேலிருந்து கீழாய் ஆழமாய் பற்றிய விழுதினை
அதிசயமாய் பார்த்தது புதிதாய் முளைத்த விதை!

பூப்பூவாய் கண்மலர் மலர்ந்து
புன்னகையாய் சிமிழ் வாய் திறந்து
பிஞ்சுக் கால்களை செல்லமாய் உதைத்து
பற்றிப் பிடித்திட கைகளை அசைத்து!

உறுதியாய் நின்ற விழுதினில் ஒன்று
புது விதையை பார்த்தது, சிரித்தது
முறுக்கிய மீசையுடன் கம்பீரமாக
நான் உன் மாமனடா என்றது!

மற்றொரு விழுதோ புன்னகை பூத்தது
பாசமாய் ஆயிரம் பொன்னகை வார்த்தது
கனிவுறும் குரலில் மென்மையாக
அத்தை நானடா கண்ணே என்றது!

ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு உருவாய்
சொந்தங்கள் என்றே பந்தங்கள் காட்டின
ஆராவர இன்பக் களிப்பைக் கூட்டின
அன்பென்னும் அரும் அமுதை ஊட்டின!

தாய் மரம் விதையினை தழுவித் தாங்கிட
தந்தையின் கிளைகள் தலையைத் தடவிட
விதையின் விழிகளில் வியப்பும் திகைப்பும்
விரிந்த இதழ்களில் களிப்பும் சிரிப்பும்!

நாளை நானும் விருட்சமாவேன் நிஜமாவேன்
உ ன்னைப் போன்றே விதைகளை விதைப்பேன்
விழுதுகள் என்றே உறவுகள் வளர்ப்பேன்
அன்பில் என்றும் கலந்தே சிறப்பேன்!

பாசக்கரம் எனவே கிளைகளை விரிப்பேன்
நட்பெனும் பறவைகள் அமர்ந்திட சிலிர்ப்பேன்
உறவெனும் விழுதுகள் உரமாய் காத்திட
உறுதியாய் நின்றே நன்மைகள் பயப்பேன்!

புத்தம் புது விதையோ புதினங்கள் பார்த்தே
புன்னகையுடனே தலையினை அசைத்தது
விதையின் கண்களில் கனவுகள் விரிந்தன
பாசம் நேசம் பிறவிப் பயன் என்றன!

விதைக்கும் விதையில் வினையேதுமில்லை
விஷத்தை விதைத்தால் பயனேதுமில்லை
நல்லதை நினைத்தே நானிலம் போற்றிட
நல்விதைகள் விதைத்தால் குறையேதுமில்லை!

நல்லன ஒன்றையே நாம் என்றும் பகிர்வோம்
நாட்டுக்கும் வீட்டுக்கு நல்லதை நினைப்போம்
அன்பையும் பண்பையும் பகிர்ந்தே மகிழ்வோம்
மனிதம் மறவா மனிதராய் வாழ்வோம்!
 
ஆக்கம் ஈழத்
தென்றல்
 

Freitag, 2. Dezember 2016

ரட்சகி...!கவிதைநெடுந்தீவு தனு

மீட்புத் திட்டத்தின்
அன்பு வெளிப் பயணத்தில்
பரிணாமித்துக் கொண்டிருக்கும்
எனது தேவசகாயமே.
வனாந்தரங்களை
கடந்து கொண்டிருக்கையில்
உன் கால்களை
கவனிக்கின்றேன்...

நெய்தல் ஆடையிலே
மேகத்திடை தோன்றும்
அசரீரி போல்
ஓர் ஒளிப்பிளம்பு
எப்போது ஒட்டிக்கொண்டு
உன் முக அழகில்
பிரகாசிக்கின்றது...

பிரியமுள்ள புனிதவதியே
சத்துருக்களின் கோரப்பற்கள்
என் மன்றாட்டுக்களுக்கு
தடைகளாகின்றன.
களிகூர்ந்து அவர்களுக்கான
மோட்ச பாதையை
காட்டியருளும்...

ரட்சகியே
தீய சக்திகளின்
நெடிகளின் ஊடே
வாழ்ந்து கொண்டிருப்பவளே
இதோ உலகம் அழிகிறது
என் கரங்களை பற்றிக்கொள்
சாதி , மதமில்லா
மலை முகடு ஒன்றில்
குடியிருப்போம்.
கரங்களை பற்றிக்கொள்
என் ரட்சகியே...

ஆக்கம்   நெடுந்தீவு 
தனு

 


Donnerstag, 1. Dezember 2016

நான் எழுதுவது கடிதம் அல்ல!கவிதை ஈழத் தென்றல்

உணர்ச்சிகளை மையாக்கி
உண்மையை பதிகின்றேன் கண்ணே,
இதை கடிதம் என்று கொள்ளாதே
இனியும் கண்களால் என்னைக் கொல்லாதே!

சொல்புத்தி சுயபுத்தி இரண்டும் இன்றி
சொர்க்கத்தில் இருக்கின்றேன் பெண்ணே,
எல்லாம் உன்னாலே இம்மாற்றம்
எதுவென்றே சொல்ல தெரியா தேக்கம்!

காலடிச் சத்தம் காதில் இனிக்கின்றதே
கல கல சிரிப்பும் கருத்தைக் கலைக்கின்றதே,
பருவத்தின் மாற்றம் எந்தன்
பாதையை கூட மாற்றுகின்றதே!

தூது சொல்ல தோழனும் இன்றி
தொலை பேசி தொல்லை இன்றி
நான் வரையும் வரிகள் இவைகள்
உனக்கென்றான என் உணரவுகள்!

கடிதம் என்று கொள்ளாதே
கடிந்து ஏதும் சொல்லாதே
உள்ளம் என்றே உணர்ந்திடு
உண்மை அன்பை மதித்திடு!
ஆக்கம்
ஈழத் தென்றல்


Mittwoch, 30. November 2016

யேர்மனி அம்மா உணவகம் தலைவரின் பிறந்தநாளில் இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியது !

தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர்

இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப் புனித மாதத்தில் மேலும் பல மாவீரர் குடும்பங்களுக்கான உதவிகளையும் , தாயகத்தில் அல்லலுறும் முன்னாள் போராளிகளுக்கும் சுயதொழில் வேலைத் திட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததோடு , சிறார்களுக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளது

தந்தை போலாகுமா! கவிதை வேதா. இலங்காதிலகம்.

முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!

பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.

வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.

நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.

இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!


பா ஆக்கம் வேதா.
இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

ஒற்றை மழைத்துளி!குறும் கவிதை மீரா , ஜெர்மனி

ஒற்றை மழைத்துளி
ஒர் உருவம் கொள்ள
வண்ணம் தீட்டும்
ஆசை மனதுக்குள்
தூரிகை இல்லாமல்
விழிகளின் முன்னே
ஓவியமாய் உருப்பெறும்
ஆக்கம் மீரா         ஜெர்மனி  

Dienstag, 29. November 2016

"பொன்மணி குலசிங்கம்" காலமானார்

ஒரு சகாப்தம் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டது.....
எங்கள் தாய்வீடாகிய இலங்கை வானொலியில் 'வானொலி மாமா' என அழைக்கப்பட்டவர்கள் பலருண்டு.
ஆனால் ஒரே ஒரு 'வானொலி அக்கா' மட்டுமே இருந்திருக்கிறார்.
அவரும் இன்று மறைந்துவிட்டார் என்ற இழப்புச் செய்தி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து நம் நெஞ்சங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை......
கவி பாரதி, 'புதுமைப்பெண்ணை' வர்ணித்த இந்த வரிகளை நினைக்குந்தோறும், எமது மனக்கண்ணில் தோன்றும் உருவத்தின் பெயர்தான்-
"பொன்மணி குலசிங்கம்"
1960 ம் ஆண்டு 'சிறுவர் மலர்' நிகழ்ச்சிக்குப் போனபோது அந்நிகழ்ச்சியின் 'நிலையத் தயாரிப்பாளராக' அவரை சந்தித்த நாள்முதல் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் வந்தபின்னும்..... ஏன் கடைசியாக அவுஸ்திரேலியாவில், நடைதளர்ந்த நிலையில் ( ஆனால் கம்பீரம் சற்றும் குறையாத நிலையில்) சந்தித்தபோதும், அந்த அன்னையை 'அக்கா' என்றுதான் உரிமையோடும் பாசத்தோடும் அழைத்திருக்கிறேன்.
அம்மா என்று அழைக்காமல் அக்கா என்று அழைத்தது ஏன்?
60 பதுகளில், மழலைகளுக்காக அவர் 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சியை நடத்தியபோதும் - அவர் 'வானொலி அக்கா'
பின், மகளிருக்காக 'மாதர் பகுதி' நிகழ்ச்சியை நடத்தியபோதும்- அவர் 'வானொலி அக்கா'தான்.
வானொலி வரலாற்றில் தமிழ் சேவையின் பணிப்பாளராக அவர் பணியாற்றிய காலம் - ஒருபொற்காலம்.
ஒலிபரப்பு உதவியாளர்களாக தமிழ் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பினைப் பெறவும் பின்னாளில் அவர்கள் மிகச் சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகப் பரிணமிக்கவும் வித்திட்டவர்.
வானொலி நிலயத்திற்கென, தமிழ் மெல்லிசை வாத்திய இசைக்கலைஞர் குழுவினரை முதன்முதலில் உருவாக்கியவர்.
வடக்கைச் சேர்ந்த இசைக்கலைஞருக்கென யாழ்ப்பாணத்திலேயே ஒரு ஒலிப்பதிவுக் கலையகத்தை நிர்மாணித்தவர். யாழ் பகுதியிலே ஒரு ஒலிபரப்பி நிலையம் (transmitter) அமைப்பதற்கும் காரணியானவர்.
6 மணியோடு நிறைவுபெற்ற தமிழ் வர்த்தக ஒலிபரப்பினை இரவு 10 மணிவரைக்கும் விரிவு படுத்தியவர்.


தென்னிந்தியாவுக்கென தனியாக ஒரு வர்த்தக ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்து பெரும் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தவர்.
மத்தியகிழக்கு நாடுகளுக்காவும் தனியாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப வழிவகுத்தவர்.


ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டபோது உத்தியோகபூர்வமாக நடனமேதை 'சித்ரசேன' அவர்களது நாட்டிய நாடகம் ஒளிப்பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு முதல் நாளே 'Know your culture' என்ற பெயரில் 'பரதநாட்டியம்' பற்றிய ஒரு விவரணச் சித்திரத்தை முதன்முதலாக தயாரித்துச் சாதனை செய்தவர்(அந்நிகழ்ச்சிக்கு உதவித் தயாரிப்பாளர் என்ற பெருமையினையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தவர்)
எம்போன்றவர்களை ஊக்குவித்து கொழும்பிலும் யாழ்மண்ணிலும் நாடக விழாக்களை நடத்திச் சாதனை புரிந்தவர்.
திறமை உள்ளவர்கள் யாராயிருப்பினும் தட்டிக்கொடுத்து ஊக்குவித்த அந்த அன்னையைப்பற்றிய நினைவுகள் அடுக்கக்காய் வந்து நெஞ்சில் அலைமோதுகின்றன.


இனக்கலவரத்தின் பின்னரும் கூட, இரண்டாம் தரக் குடிமக்கள், போன்ற தாழ்வு மனப்பான்மை இன்றி, வானொலி நிலையத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்கும் தைரியம், அவர் தமிழ் சேவையின் பணிப்பாளராக பணியாற்றிய காலம்வரை தொடர்ந்தது என்பதை, எமது சமகாலத்தில் பணியாற்றிய அனைவருமே இப்போது நன்றியோடு நினைவு கூர்வர் என நம்புகிறேன்.
'பிறப்பவர் எல்லோரும் என்றோ ஓர்நாள் இறப்பது நியதி'
என்ற உண்மையை உணர்ந்து உள்ளத்தைத் தேற்றி, அந்த அன்னையின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனை செய்வோம்.
குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Samstag, 26. November 2016

பிரிவும் ஒரு வகை மரணம்..கவிதை கவித்தென்றல் ஏரூர்

தாவணி போட்டு நான் நடந்தேன்
தண்ணீரில் தாமரை போல..
தாயவள் அன்பு தாங்கி நின்றது
தரணியில் நான் வாழ....

பெற்றவள் பெரும் கவலை - தன் பெற்ற
பெண்ணுக்கு திருமணம் அவள் கடமை
நற்குணமென்று தேடிடும் மாப்பிள்ளை
நாட்கள் நகர்ந்ததும் அறிந்திடும் அவன் பிழை

கற்பனை கனவுகள் கொண்டவள் மாது
கணவன் குற்றங்கள் குறைகள் கண்டிடும் போது
கட்டிலில் இன்பங்கள் காண்பது ஏது
கவலை கொட்டிடும் மனது விடியாது

இல்லற வாழ்வினில் இல்லாத ஏழை
இணைந்து கொண்டதும் வாழ்வாகிடும் பாலை
உள்ளதை சொல்லிட முடியாத பாவை
உள்ளுக்குள் உருகிடும் உணர்வுள்ள ஊமை

பிரிவு வந்து எரிக்கும் தன் உடலை
பாலுணர்வு கொண்ட பெண் விடலை
திணிக்கும் இரவு சுடும் தினமும் அவளை
தியாகம் செய்து வாடும் பெண் அவலை

இழந்ததை பெற்றிட நினைக்கும்
இன்பம் இரண்டென கலந்திட துடிக்கும்
நடந்தவை கண்முன்னே இனிக்கும் - உணர்வுகள்
நிழலின்றி தனிமையில் நடக்கும்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்


தமிழீழத்தலைவர் மேதகு திரு பிரபாகரன் அவர்களின் 62 வது பிறந்தநாள்வாழ்த்து 26.11.16

அடிமை விலங்கொடித்த வீரத்தலைவன்
தாயிடம்
கருவாகி
உருவாகி
பூமியில்
பிறந்தநாள்
அகவை அறுபத்தியிரண்டு இன்று
இவன் -விடிவின் கதிர் ஒளி
வீரத்தின் முரசொலி
தலைவனின் குரல்கேட்க
தரணியில் பறந்தது புலிக்கொடி
கொடிகாண புலிக்கொடி
எழுந்தது தமிழ் புலி
விடிவாழ வந்தது எங்கள்
வீரப்புலிக்கொடி
விழிப்புக்கு குரலடி
வீரத்தில் புலிக்கொடி
வியத்திட வரும் இனி
விழித்திடு புலிக்கொடி
கருப்பிள்ளை பெயர்சொல்லும் - உன்
கடமையை உலகு  போற்றும்
சிறப்புடை போர்தன்னை
சித்தரித்து உலகம் போற்றும்
நாயகனே
வாழ்க பல்லாண்டு வளம்கொண்டு நுாறாண்டு

ஆக்கம் ஈழத்து இசைக்கவிஞன் எஸ்.தேவராசா



கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.
அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..
பேருந்து 1
Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)

12:45 p.m. -1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m.
ERAA Super Market
(Morningside and Finch)
1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m
New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)
1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.
பேரூந்து 2
Eraa Super Market
(Midland & Eglinton)
12:30 p.m. -12:45 p.m.
4:30 p.m. – 4:45 p.m.
SP Importers
(Brimley & Lawrence)
12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m
Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.
20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.
Woodside Cinema
(Mc Cowan & Finch)
1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm
பேருந்து 3
Columbia Video
(Kennedy and Steels, Brampton)
4:00pm- 4:30pm
Uthayas Super Market (Kipling &
Steels)
4:30pm – 5:00pm
Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)
5:00pm – 5:30pm
இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241
கனடிய நினைவெழுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219
- See more at: http://www.canadamirror.com/canada/74815.html#sthash.zAKn5jsV.myyi4gdv.dpuf
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை
கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.
அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..
பேருந்து 1
Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)

12:45 p.m. -1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m.
ERAA Super Market
(Morningside and Finch)
1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m
New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)
1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.
பேரூந்து 2
Eraa Super Market
(Midland & Eglinton)
12:30 p.m. -12:45 p.m.
4:30 p.m. – 4:45 p.m.
SP Importers
(Brimley & Lawrence)
12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m
Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.
20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.
Woodside Cinema
(Mc Cowan & Finch)
1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm
பேருந்து 3
Columbia Video
(Kennedy and Steels, Brampton)
4:00pm- 4:30pm
Uthayas Super Market (Kipling &
Steels)
4:30pm – 5:00pm
Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)
5:00pm – 5:30pm
இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241
கனடிய நினைவெழுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219
- See more at: http://www.canadamirror.com/canada/74815.html#sthash.zAKn5jsV.myyi4gdv.dpuf

Donnerstag, 24. November 2016

khjgdhsf


கனடா வாழ் ஈழத்தமிழர்களுக்கு கார்த்திகை 27க்கானஅறிவித்தல்!

ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை

கார்த்திகை 27 ஞாயிற்றுக் கிழமை மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்க திடலில் இடம்பெறவுள்ள தமிழர் நினைவெழுச்சி நாளுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் வழமை போல் இந்த ஆண்டும் கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் ஒழுங்கு செய்யபப்ட்டு தரப்படும் என அறியத்தரப்படுகினறது.

அதற்கான விபரங்கள் கீழே தரப்படுகின்றன..

பேருந்து 1

Malvern Mall
Denison Plaza
(In front of Mc Donalds)

12:45 p.m. -1:00 p.m.

4:45 p.m. – 5:00 p.m.

ERAA Super Market
(Morningside and Finch)

1:00 p.m. – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m

New Spice Land
(Markham and Steels) (McCowan &
Denison)

1:15 p.m – 1:30 p.m. 1:30 p.m. – 1:45 p.m.
5:15 p.m. – 5:30 p.m. 5:30 p.m. –
5:45 p.m.

பேரூந்து 2

Eraa Super Market
(Midland & Eglinton)

12:30 p.m. -12:45 p.m.

4:30 p.m. – 4:45 p.m.

SP Importers
(Brimley & Lawrence)

12:45 p.m. – 1:00 p.m.
4:45 p.m. – 5:00 p.m

Asian Textiles
(Markham and Lawrence)
1:00 p.m – 1:15 p.m.
5:00 p.m. – 5:15 p.m.

20 Taxedo Crt
(Markham and
Ellesmere) (McCowan & Denison)
1:15 p.m. – 1:30 p.m.
5:15 p.m. – 5:30 p.m.

Woodside Cinema
(Mc Cowan & Finch)

1:30 p.m. – 1:45 p.m.
5:30 p.m. – 5:15 pm

பேருந்து 3

Columbia Video
(Kennedy and Steels, Brampton)

4:00pm- 4:30pm

Uthayas Super Market (Kipling &
Steels)

4:30pm – 5:00pm

Arun Bakery
(Jane and Major Mackenzie, in front of Wonderland)

5:00pm – 5:30pm

இங்கு தரப்பப்டும் தொடர்பு இலக்கனலுடன் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

1) Maria – (647)-856-6548
2) Punith- (647)-389-7120
3) Komala (416)-451-5241

கனடிய நினைவெழுச்சி அகவம் தொடர்பு இலக்கம்- 647 980 – 5219
- See more at: http://www.canadamirror.com/canada/74815.html#sthash.zAKn5jsV.myyi4gdv.dpuf

"சித்திரமும் கற்பனையும்" கவிதை ஏரூர் எழுதிய

சிலையொன்று சிரிக்கக் கண்டேன் - மனம்
சிதைவுற்று துடித்து நின்றேன்
சித்தாடை கட்டி வந்து - மங்கை
சிரித்து சுட்டாலே கண்ணைக் கொன்று

சிறை பிடிக்கும் விழிகள் தீயோ
சிந்து நதி செம்மீன் தானோ - உன் சிகை
சிறகடிக்கும் இருள் வானோ - என்
சிந்தைகளை நதியோடும் திருடுவேனோ ?

சிங்காரி உன் சில்மிசத்தில் நாளும்
சிற்றிடையில் நானமர சிம்மாசனம் வேணும்
சீக்கிரமா சொல்லி விடு நீயும்
சில காலம் உயிர் வாழ்ந்தால் போதும்

சிக்கன் குனியா வந்தது போல்
சீக்குல நான் துடிக்கிறேன்
சித்திரமே உன்னை நினைத்து
செத்து தினமும் பிழைக்கிறேன்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்

Dienstag, 22. November 2016

விதை!..கவிதை மணியம்

விதை
தந்தை விதை போட்டார்
தாயார் பயிர் வளர்த்தார்
வயலில் நிற்காமல்
வந்துவிட்டோம் வெளியினிலே!
நாங்கள் விதை போட்டு
நல்லபயிர் வளர்ப்போமா?
நாட்டுக்கும் மொழியினுக்கும்
நற் தொண்டு செய்வோமா?
ஏக்கம் எங்களுக்குள்
எமது விதை என்ன செய்யும்?

ஆக்கம் மணியம்

Montag, 21. November 2016

தபோலா வாத்தியக்கலைஞர் ரவி காலமானார்

யாழ்.அல்வாய்- வடக்கைச்  பிறப்பிடமாகவும் , கடந்த 30 ஆண்டுகளாக யேர்மனி- எசன் நகரில் வாழ்ந்து
வந்தவருமான பிரபல தபோலா றம் மேளம்  என பல வாத்தியக் கருவிகளை  மேடைநிகழ்வுகளில் மீட்டி சிறப்பித்த சிறப்பான கலைஞன் ரவிச்சந்திரன் ராஜரட்ணம் அவர்கள்-,ரவி- இன்று எசனில் காலமாகி விட்டார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவர் சாந்தியின் அன்புக்கணவரும், கீர்த்தன்,தூரிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இத்தகவலை, நண்பர்கள்,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் மகன் கீர்த்தன் ரவி.

Donnerstag, 17. November 2016

மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதை நூலின் வெளியீட்டு விழா17.11.2016

மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதை நூலின் வெளியீட்டு விழா
(முகநூலினால் மூச்சு கொடுப்போம்)
ஈழத்தில் மல்லாவியைச் சேர்ந்தவரும் தற்போது இங்கிலாந்து தேசத்தில் வசிப்பவருமாகிய மார்க் ஜனாத்தகன் அவர்கள் எழுதிய 'ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது, 17.11.2016 வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு, மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெறும். எமது ஈழப்படைப்பாளியின் இந்த முயற்சிக்கு கரம் கொடுத்து உயர்த்துவோம்.

Mittwoch, 16. November 2016

ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் 19.05.2016 காலமானார்

ஈழத்து இசை வித்தகர் யாழ்.ரி.சீலன் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார்.
19.05.2016 அதிகாலை வேளையில் அவர் காலமானார் என்ற செய்தி ஈழத்து இசை உலகை அதிரவைத்துள்ளது.
யாழ் மண்ணில் இற்றைக்கு நான்கு தசாப்த காலங்களுக்கு முன்னர் தனது இசை வித்துவத்தால் பல்லாயிரம் இரசிகர்களைக் கவர்ந்துகொண்டவர் யாழ் சீலன்.
''யாழ்ப்பாணத்தில் இசைவாணர் எம்.கண்ணன் அவர்கள் இருந்திருக்காவிட்டால் நான் இசைக்கலைஞனாகியிருக்கமாட்டேன். என் இசைக்கடவுள் கண்ணன் அவர்கள்'' எனக் கூறி வந்தவர் யாழ்.ரி.சீலன்.
இவர் தொடாத வாத்தியங்கள் இல்லை என்றே கூறலாம். கிற்றார் வாத்தியம் இசைப்பதில் புகழ்பெற்றிருந்தவர், மேலும் கீ போட், புல்லாங்குழல், வீணை, மிருதங்கம், ஈற்றில் ஸ் ரீல் கிற்றார் போன்ற வாத்தியங்களை இசைப்பதில் மிகவும் கைதேர்ந்தவராக விளங்கி வந்த எங்கள் தேசத்தின் இசைச் சொத்து.
கலாலயா இசைக்குழுவிலே தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தவர் தொடர்ந்து யாழ் நகரில் இயங்கிவந்த பல்வேறு இசைக்குழுக்களில் தனது பங்களிப்பை வழங்கி வந்தார்.
‘சீலன்ஸ்ரோன்’ என தனியாக ஓர் இசைக்குழுவையும் இவர் இயக்கியிருந்தார்.
தாயக மண்ணை விட்டுப் புலம் பெயரும் வரை யாழ் சுண்டுக்குளி ராஜன்ஸ் இசைக்குழுவில் அங்கம் பெற்று கீ போட், கிற்றார் போன்ற வாத்தியங்களை ஒரே வேளையில் இசைத்து இரசிக உள்ளங்களை மகிழ்வித்து வந்தார்.
பிரிட்டன் நாட்டுக்கு வருகை தந்த சீலன் அவர்கள் ரெய்ன்போ இசைக்குழுவின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துக்கொண்டார்.
நாடக ஆசான் ஏ.சி.தாஸீஸியஸ் அவர்களின் நாடகங்களுக்கு இசையமைப்பதில் முழுமையான சிரத்தையோடு ஈடுபட்டுவந்தார்.
ஐபிசி தமிழ் 1997ல் லண்டன் - வொக்ஸோல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் தனது ஒலியமைப்பு தொழில் நுட்பத்தை பகிர்ந்திருந்தார்.
கலைஞர்களுடன் மிகவும் நேசத்துடன் உறவாடிவந்த யாழ் சீலன் அவர்களை கடந்த 07.05.2016 அன்று வைத்திய மனையில் பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன் - ஜேர்மனி, பாடகர் எம்.பாக்கியராஜா - டென்மார்க், இசைக்கலைஞர் எம்.குருநாதன் - பிரிட்டன், இசையமைப்பாளர் கே.சுந்தர் (குட்டி மாஸ்ரர்) - நோர்வே, - நோர்வே இசைக்கலைஞர் ஆர்.கணேஸ் , ஆகியோர் சகிதம் சென்று பார்க்க முடிந்தது.
எம்மைக் கண்டதும் மிகவும் சந்தோசமடைந்தார்.
அவரது கடைசி நிமிடங்களில் சந்தித்துக்கொண்டதில் எமக்கும் திருப்தி.
ஈழத்து இசையுலகில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பார் யாழ்.ரி.சீலன்.
வாழ்க யாழ்.ரி.சீலன் புகழ்.

Sonntag, 13. November 2016

முல்லைத்தீவு தேசிய இளைஞர் சேவையினரால் முன்னெடுக்கப்பட்ட மூன்றுநாள் பயிற்சி நிறைவுகண்டது (நிழல்படங்களைபார்க்க)

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவையினரால் மூன்று நாட்கள்  தலைமைப்கயிற்சி முள்ளியவளை மகாவித்தியாலயத்தில் மகவும் சிறப்பாக இளைஞர்கள் மாவட்ட வளவாரை யுவதிகளும்  இளைஞகளும் சிறப்புடன் கலங்து கொண்டனர்  இதில் முல்லை நாடகக் கலைஞர்,யோகா பயிற்றுவிப்பாளருமான  குமாரு. யோக்கேஸ் அவர்கள் தியானப்பயிற்றியை  வழங்கி தலைமைப்கயிற்சி நிறைவு கண்டள்ளது இதில்  வேறு பயில்றுவிப்பாளர்கள் அரச ஊழியர்கள் என கலந்து பறின்றவர்களுக்கான  சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்ததுடன் நிகழ்வு நிறைவானது























































Disqus Shortname

Comments system

 
Blogger Templates