Social Icons

Mittwoch, 24. Februar 2016

இரத்தினம் கவிமகனின் ”வேரோடும் விழுதுக்கான” சுபாரஞ்சன் வாழ்த்துக்கள்


வேரோடும் விழுது.......
தமிழ் வளர்த்த புலவர்களின் நீட்சியாகவே
உன்னை படைக்கப்பட்டு
ஒரு பதிப்பகம் தன்னை
வெளியிட்டு
ஒரு பதிப்பை படைத்து
ஒரு கவிஞனை /தந்தையை
அழகு பார்த்து தமிழ்
ஆழம் பார்த்து
நன்றாக நிறைவேறிய
தருணத்தில்.......
உன் புத்தகக் கண்ணாடியில்
முகம் பார்த்து மகிழ்ச்சி
பெற வாழ்த்துக்கள் .....
தேசத்து வலிகளை
தொடர்கின்ற துன்பங்களை
குருதி மை கொண்டு
கீறியிருப்பாய் என
உணர்கின்றேன்......
விரிந்த வாசகர் பரப்பில்
உன் படைப்புகளில்
பேச என்றும்
நிறைவான வாழ்த்துக்கள் ....

சுபாரஞ்சன் 


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates