Social Icons

Donnerstag, 18. Februar 2016

ஈழத்துப்பித்தன் எழுதிய;போர் கண்ட வம்சமெடி!!!














நிலமிடை தமிழ் வீரம்
நாட்டிப் பெண்டிர் நின்று
நீண்ட எல்லைகளின் சாமிகளாய்
நிலம் காத்த மண்ணிலிருந்து
நித்தம் வரும் சேதி கேட்க
நீறு பூத்த நெருப்புபோல்
நெஞ்சம் எல்லாம் கனல்கிறது
அங்கையற் கண்ணிகளாய்
அகிலம் முழுதும் அறிய
ஆயுதம் ஏந்தி நின்று
அசர வைத்த எம் குலப்பெண்கள்
அடி ஒற்றி வந்த பிஞ்சுகள்
அநீதியாய் அற்ப சுகத்துக்காய்
அரக்கர்கள் கரங்களில் மாள்வதோ?
பொறுத்தார் பூமி ஆழ்வாராம்
பொங்கினால் பயனேதும் இல்லையாம்
போங்கடா போங்கடா உங்கள்
பொறுப்பற்ற பதில்களைக் கொண்டு
பொங்கி எழும் தருணம் இது
பெண்டிரே குழல் கொண்டு
போர் கண்ட வம்சமெடி நீங்கள்
போகம் நீ என்று வன் புணர வரும்
பேயர் தனை துவம்சம் செய்ய
போர்க் கலை யாவும் கற்று
பெரும் புயலாக நின்றிறெடி
பேதை அல்ல ஈழம் தந்த
பெண்ணவள் என்றுணர்ந்து
பெருமையோடு வாழ்ந்திடெடி.


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates