Social Icons

Donnerstag, 18. Februar 2016

கவிஞை சுபாரஞ்சனின் கண்மணிகள்.....

இடைவெளியில்லாமல் நெஞ்சை உலுக்கும் செய்திகளாகவே பாலியல் பலாத்காரம்,வன்புணர்வுச் சம்பவங்கள்
இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது...

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறையற்ற சமூகமாக இருந்து விடாது, இக் கொடுமைகள் தொடர்பான கடைப்பிடிக்க வேண்டிய
அணுகுமுறைகள் மூலம் சமூக விழிப்புணர்வுடன் செயற்பட்டு குற்றத்தை நீதிமன்றம் ஏற்றி குற்றவாளியை தண்டிக்க சமூகம் ஒன்றுதிரள வேண்டும் !!!

வேட்டையாடிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளை ஒழித்துக்கட்ட
வேண்டும்.புரையோடிக் கொண்டிருக்கும் பெண்ணினத்தின் கொடுமைகளை களைய சட்டமன்றங்கள் விசேட பணியாக
செயலாற்ற வேண்டும்.
ஒமுக்கம் என்ற பெயரில் பாலியல் குற்றவியல் தொடர்பான கல்வியை அறியாமலே வளர்ந்தவர்கள் நாம் !!
எமது அடுத்த சந்ததியினராவது வாய் திறந்து பேசும் தைரியத்தையும் தெளிவான புரிதலையும் பெற கல்விமான்கள்,சமூக பணியாளர்கள்
அக்கறை கொண்டு குழந்தைகளின்
பாதுகாப்பையாவது உறுதிப்படுத்த ஆவன செய்வார்களா......???
அநீதிகளை மௌனமாக்கி சகித்துக் கொண்டு வாழ்ந்து முடிக்கின்றோம்
இந்தக் கொடுமைகளை அனுபவிக்கவா இவர்கள் பிறந்தார்கள்??

மிக மிக மனவேதனையோடு ஒரு பெற்றோராகவே இப்பதிவை இடுகின்றேன் ........

ஆக்கம் கவிஞை 




சுபாரஞ்சன் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates