Social Icons

Dienstag, 2. August 2016

சுதாகரன் சுதர்சன் எழுதிய புதை குழி

மயானத்தில் படுத்துக்கொண்டு
புதை குழி தேடுகிறேன்
ஆனாலும் தேவையில்லை

மரணத்தின் பின் விரும்புகிறேன்
தென்னோலையில்
படுக்கை கட்டி
ஒரு துளி கண்ணீர் இன்றி
அழு குரல் கேட்காமல்
ஒரு வெட்ட வெளியில்
புதைத்து விடுவதை

உயிருடன் இருக்கும் கொடுக்காத
சுகத்தயா
மரணத்தின் பின்
கொடுக்க போகிறார்கள்
மரத்தில் பெட்டி செய்து
கல்லறை எனும்
பேயுறங்கும் வீடமைத்து
மரணத்தும் உக்கா
நிலையில் உடலை
மூடி வைத்து
மீண்டும் கொடுமையை
தானே கொடுக்க போகிறார்கள்

காடுகளில் உணவின்றி
அலையும் மிருகங்கள்
சந்தோசப்படட்டும்
ஒரு வேளை உணவு
தேடாமல் கிடைத்து
விட்டது என்று
அங்காவது என்னால்
ஒரு புண்ணியம் கிடைக்கும்
 
 
ஆக்கம்
சுதாகரன் சுதர்சன்
 
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates