Social Icons

Mittwoch, 17. August 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய அக்கம் பக்கம் பார்த்து

அப்பனுக்கு சாக்குச் சொல்லி
ஆத்துப் பக்கம் வாறேன் மச்சான் நானு
அக்கரையில் ஆறுமில்லையென்றா
ஆள விட்டு மச்சான் சொல்லு தூது

அக்கம் பக்கம் பார்த்துப் புட்டு
ஆத்துக்குள்ள மூழ்கி நில்லு
அச்சமின்றி நான் வருவேன்
அணைச்சி என்னை தொட்டுக் கொள்ளு

அந்தி சாயும் நேரத்துக்குள்ள உன்
ஆசைகளை தீர்த்துக் கொள்ளு
அத்துமீறி ஆறும் வந்தா என்ன
ஆத்துக்குள்ள அமுக்கிக் கொள்ளு

அப்புறமா நீரில் என்ன
ஆடையாக உடுத்துக் கொள்ளு
அவ்வப் போதும் நீயும் என்ன
அயிர மீனு போல கடித்துக் கொள்ளு

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates