கண் பார்க்கும் என்னவளே
மண் பார்த்து மெல்ல நட
உன் உதட்டு சிரிப்பாலே
என் இதயம் நகருதடி...
கட்டை விறகு கவனமடி
மட்டை தாண்டி தூக்கி வீசு
காடு மேடு கடந்திருப்பாய்
கால கொஞ்சம் நீட்டித் தூங்கு...
கை வளையல் ஓசையிலே
தை வருவதும் இதுதானோ
வளை புருவ நெற்றியிலே
விதை முளைப்பதும் அழகு புள்ள...
மனசோரம் எனை வைச்சு
தவிப்போடு இருப்பவளே
உனதருகில் நானிருந்து
தந்திடவா என் நகலை...
தலையிலே துணிவைச்சு
சாலை நோக்கி வருபவளே
காலையிலே நானும் வருவேன்
மாலைக்குள்ளே மணந்திடுவோம்...
ஆக்கம்
நெடுந்தீவு தனு
மண் பார்த்து மெல்ல நட
உன் உதட்டு சிரிப்பாலே
என் இதயம் நகருதடி...
கட்டை விறகு கவனமடி
மட்டை தாண்டி தூக்கி வீசு
காடு மேடு கடந்திருப்பாய்
கால கொஞ்சம் நீட்டித் தூங்கு...
கை வளையல் ஓசையிலே
தை வருவதும் இதுதானோ
வளை புருவ நெற்றியிலே
விதை முளைப்பதும் அழகு புள்ள...
மனசோரம் எனை வைச்சு
தவிப்போடு இருப்பவளே
உனதருகில் நானிருந்து
தந்திடவா என் நகலை...
தலையிலே துணிவைச்சு
சாலை நோக்கி வருபவளே
காலையிலே நானும் வருவேன்
மாலைக்குள்ளே மணந்திடுவோம்...
Keine Kommentare:
Kommentar veröffentlichen