Social Icons

Freitag, 2. Dezember 2016

ரட்சகி...!கவிதைநெடுந்தீவு தனு

மீட்புத் திட்டத்தின்
அன்பு வெளிப் பயணத்தில்
பரிணாமித்துக் கொண்டிருக்கும்
எனது தேவசகாயமே.
வனாந்தரங்களை
கடந்து கொண்டிருக்கையில்
உன் கால்களை
கவனிக்கின்றேன்...

நெய்தல் ஆடையிலே
மேகத்திடை தோன்றும்
அசரீரி போல்
ஓர் ஒளிப்பிளம்பு
எப்போது ஒட்டிக்கொண்டு
உன் முக அழகில்
பிரகாசிக்கின்றது...

பிரியமுள்ள புனிதவதியே
சத்துருக்களின் கோரப்பற்கள்
என் மன்றாட்டுக்களுக்கு
தடைகளாகின்றன.
களிகூர்ந்து அவர்களுக்கான
மோட்ச பாதையை
காட்டியருளும்...

ரட்சகியே
தீய சக்திகளின்
நெடிகளின் ஊடே
வாழ்ந்து கொண்டிருப்பவளே
இதோ உலகம் அழிகிறது
என் கரங்களை பற்றிக்கொள்
சாதி , மதமில்லா
மலை முகடு ஒன்றில்
குடியிருப்போம்.
கரங்களை பற்றிக்கொள்
என் ரட்சகியே...

ஆக்கம்   நெடுந்தீவு 
தனு

 


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates