Social Icons

Freitag, 23. Dezember 2016

கரிசல் காட்டு கரும்புப் பூவ!கவிதை கவித்தென்றல் ஏரூர்

தென்றல் வீசும் வேளையிலே - கவித்
தெம்மாங்கு பாடிவந்தேன் சோலையிலே
தென்னங்கீற்று கிளிபோல
தேடி வந்தேன் நான் மாலையிலே

பத்த வைச்ச வாழையில போல
பத்தினியா நானிருக்கேன்யா காள
பாசம் வைத்து வாடுதுய்யா உன் பாவை
பாவம் பார்க்க தோணலியா உன் பார்வை

எத்தனை நாள் காத்திருக்கேன்
ஏங்கி ஏங்கி பாத்திருக்கேன்
என்னுசுர தாங்கிருக்கேன்
எந்நேரமும் உன் நினப்பில் தானிருக்கேன்

கிழக்கப் பார்த்து போறீயே
கிறுக்கா நானும் இருக்கேனே
சிறுக்கி என்னை பாத்தாலே
சீவன் என்னுடலில் இருக்குமே

எட்டி எட்டி உதைக்கிறது
இரவில் வந்து உன் நினப்பு
இருட்டில் நானும் துடிக்கிறேனே
என்ன இது உன் குறும்பு

கரடு முரடு மனசா உனக்கு
கரும்பா மாத்த என்னை உருக்கு
கழனிக் காட்டில் என்ன இருக்கு
கரும்புச் சாறா தாறேன் உனக்கு

கொலுசு சத்தம் கொல்லுதென்ன
கொழுவிருக்க எண்ணுதுன்ன - இந்த
கரிசல் பூவ பாரு பச்சமண்ணே
கரிசனையா வந்து சேரு ஆசை மச்சானே
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates