Social Icons

Dienstag, 8. November 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய என்னுள் நீ இணைந்திரு !

''ம்'' என்ற
உன் சொல்லுக்கு
கவிப்பாடுகிறேன்
இன்னும் பல
சொற்களுக்கு அர்த்தம்
அதில் தேடுகிறேன்
உயிர் மெய்யை
உயிரில் கொண்டு
உன்கென்றொரு
கவி அமைக்கிறேன்
''ம்'' சொல்லுமாறு
பல கவிதைகளை
முன் வைக்கிறேன்
என் தமிழ் கவி மணக்க
"ம்" என்று என்றும்
என்னுள் நீ இணைந்திரு
இணையம் தொடர்ந்து
இமயம் தொட என்னுள்
கலந்திரு இதயம் இணைந்து

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates