Social Icons

Samstag, 26. November 2016

பிரிவும் ஒரு வகை மரணம்..கவிதை கவித்தென்றல் ஏரூர்

தாவணி போட்டு நான் நடந்தேன்
தண்ணீரில் தாமரை போல..
தாயவள் அன்பு தாங்கி நின்றது
தரணியில் நான் வாழ....

பெற்றவள் பெரும் கவலை - தன் பெற்ற
பெண்ணுக்கு திருமணம் அவள் கடமை
நற்குணமென்று தேடிடும் மாப்பிள்ளை
நாட்கள் நகர்ந்ததும் அறிந்திடும் அவன் பிழை

கற்பனை கனவுகள் கொண்டவள் மாது
கணவன் குற்றங்கள் குறைகள் கண்டிடும் போது
கட்டிலில் இன்பங்கள் காண்பது ஏது
கவலை கொட்டிடும் மனது விடியாது

இல்லற வாழ்வினில் இல்லாத ஏழை
இணைந்து கொண்டதும் வாழ்வாகிடும் பாலை
உள்ளதை சொல்லிட முடியாத பாவை
உள்ளுக்குள் உருகிடும் உணர்வுள்ள ஊமை

பிரிவு வந்து எரிக்கும் தன் உடலை
பாலுணர்வு கொண்ட பெண் விடலை
திணிக்கும் இரவு சுடும் தினமும் அவளை
தியாகம் செய்து வாடும் பெண் அவலை

இழந்ததை பெற்றிட நினைக்கும்
இன்பம் இரண்டென கலந்திட துடிக்கும்
நடந்தவை கண்முன்னே இனிக்கும் - உணர்வுகள்
நிழலின்றி தனிமையில் நடக்கும்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates