Social Icons

Donnerstag, 24. November 2016

"சித்திரமும் கற்பனையும்" கவிதை ஏரூர் எழுதிய

சிலையொன்று சிரிக்கக் கண்டேன் - மனம்
சிதைவுற்று துடித்து நின்றேன்
சித்தாடை கட்டி வந்து - மங்கை
சிரித்து சுட்டாலே கண்ணைக் கொன்று

சிறை பிடிக்கும் விழிகள் தீயோ
சிந்து நதி செம்மீன் தானோ - உன் சிகை
சிறகடிக்கும் இருள் வானோ - என்
சிந்தைகளை நதியோடும் திருடுவேனோ ?

சிங்காரி உன் சில்மிசத்தில் நாளும்
சிற்றிடையில் நானமர சிம்மாசனம் வேணும்
சீக்கிரமா சொல்லி விடு நீயும்
சில காலம் உயிர் வாழ்ந்தால் போதும்

சிக்கன் குனியா வந்தது போல்
சீக்குல நான் துடிக்கிறேன்
சித்திரமே உன்னை நினைத்து
செத்து தினமும் பிழைக்கிறேன்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates