Social Icons

Montag, 11. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய உன் பார்வை

ஊடுருவி தாக்குதடி உன் பார்வை
உயிரு உடலை விட்டு தாவுதடி உன்மேல
ஈடு கட்ட முடியலயே என் பாவை
ஊடு கட்டி விளையாடவா உன்னுள்ள

மூடு வந்து முனுமுனுக்கிறா முறப்பையா
மூணு முழப் பூக் கொடுத்தா உன் இரவய்யா
ஈடு கொடுத்து நான் இருப்பேன் உண்மையா
ஈரைந்து திங்கள் நான் சுமந்தா துன்பமய்யா

காடு வளம் நிறைந்திருக்கும் பூமியடி நான்
களையெடுத்து விதைக்க வாரேன் புரிஞ்சிக்கோடி
கூடு விட்டு கூடு பாயும் இது வித்ததான்டி - நாம்
கூத்தடிச்சி சேர்ந்திருந்தால் என்ன குத்தமாடி

பாடு பட்டு உழைக்கிறப்போ பயனளிக்கும்
பாவம் பார்த்து உணவளித்தால் பசி தீரும்
தேனெடுத்து நீ குடிக்க தெம்பிருக்கும் - நீ
தேருழுத்து தெருவில் விட்டால் ஊர் சிரிக்கும்
ஆதிமுதல் அந்தம்வரை - உலகில்
நிரந்தரமாக யாரும் இருந்ததில்லை
ஆணும் பெண்ணும் வாழ்ந்து - மண்ணில்
ஆசையின்றி யாரும் இறந்ததில்லை

ஆக்கம்

கவித்தென்றல் ஏரூர்


                                                

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates