Social Icons

Donnerstag, 7. Juli 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிய நவீன நுழைவுகள்..!

விஞ்ஞான வேகம்
வேடிக்கை காட்டுது
செல்பிக் கலாச்சாரம்
சொல்லாமல் சொல்லுது
நில்லமல் நீளுது..
நிஜமான செய்திகள்.
நகர சுத்திகளின்
நையாண்டி இன்றைய
யதார்த்தம்..இவர்கள்
வீதியில் தினம்
கண்டு நகைக்கும்
செல்பிக் கூத்துக்கள்.!

முகத்தை கோணலாக்கி
அங்கவீனர்களாக்கி
அடிக்கடி எடுக்கும்
செல்பியால் முகநூல்
முற்றம் வடிவிழக்குது..!

பிரசவ அறையில்
பிறந்த பிள்ளை கண்
விழிக்க முன்னரே
தொட்டிலில் போட்டு
அழகு பார்க்காமல்
அதன் பேஸை
பேஸ்புக்கில் போட்டு
உலகறிய வைப்பதில்
செல்பி முதலிடமன்றோ..!

ஆனந்தக் களிப்பும்
அவசர எடுப்பும்
சந்தர்ப்பவாதிகளினால்
சந்திக்கும் வருவதுண்டு
சிந்திக்கத் தவறினால்
கண்ணீருக்கும் இடமுண்டு
காலம் கோலம்
மாறிக் கூத்தடிக்கும்..!



ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




படம் நன்றி Suga Rama

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates