Social Icons

Freitag, 1. Juli 2016

நெடுந்தீவு தனு எழுதிய இரசனை

என் அவள்
எங்கோ பிறந்த
தேவதை...
நீலப் பட்டுடுத்தி
வெண் நுரை
தலை சூடி
ஆடிவரும் ஆடல்
குழந்தை...

சல்லாபிக்கும்
இசை தாளங்களின்
ஆதி தாளம்
இவள்...

காற்றின்
சுவாச இராகங்களால்
தினம் தினம்
இரட்டிப்பாகும்
அபிநயக்காரி...

உயிரொன்றின்
பிறத்தலில்
சத்துருக்களை
விரட்டி விடும்
வீரப்பெண்...

அசைதலில்
உட்பொருள் கொண்ட
இலக்கணக்காரி..

அடங்கலில்
மாற்றங்கள் குறிக்கும்
சாத்திரக்காரி...

என் அவள்
எங்கோ பிறந்த
தேவதை...

தினம் தினம்
நான் விழிக்கும்
என் குழந்தை...

அந்தமில்லா பேருடலை
லயித்து நிற்கும்
இமை வெட்டா
கண்௧ளின் மறுபெயர்
என்னவளுக்கான
ரசணை...


ஆக்கம்  
நெடுந்தீவு தனு 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates