Social Icons

Samstag, 23. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய தமிழே..!

பொன்வரி கொண்டு புனைகிறேன் தமிழே..!
புன்னகை பொழிகிறது என் மனதிலே
கண் நகை புரியும் காந்தம் நீதானே
கண்ணிமை போல் காப்போம் கவியை நாமே

இசை மீட்டும் என்னுள் நீயும் உயிரே
இசைவாக்கும் செய்யும் எந்தன் உறவே
உன்னில் உறவாடி மகிழ்வேன் தமிழே
உயர்வாக கருதும் என்றும் உலகே

படித்தவன் கையில் வரமாய் தமிழே
பாமரன் கண்ட புதுமையும் நீயே தமிழே
ஏட்டினில் சுவைக்கும் அமிர்தமும் தமிழே
ஏற்பார் உள்ள வரை உயருமெம் உயிர்த் தமிழே

ஆக்கம்

                       கவித்தென்றல் ஏரூர்

                                                

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates