Social Icons

Samstag, 9. Juli 2016

கவிக்குயில் சிவரமணி எழுதிய இன்னும் மாறலை...!!

 எங்கோபோகுது உலகம்
உள்ளங்கையில் தவழுது இன்று
இருந்தும் இந்நிலை ??

மனித வர்க்கம் மாறுது
மலையைக்குடைந்தும் தேடுது
இருந்தும் இந்நிலை

பணத்தை இறைக்கும் அரசியல்
வரியாய் மனித வேர்வைகள்
இருந்தும் இந்நிலை

ஊருக்குள் பல இல்லங்கள்
சிறுவர் பெரியவர் மகளிர் என
இருந்தும் இந்நிலை

மனிதம் பேசும் மகாத்மாக்கள்
தர்மவானாய் உலவும் தர்மர்கள்
இருந்தும் இந்நிலை

நியாயம் பேசும் சட்டங்கள்
நீதிகேட்பவரையே துன்புறுத்தும்
இருந்தும் இந்நிலை

பிள்ளையின்றி பல
நல்ல உள்ளங்கள்
பிறப்பின் தேடலால்
இருந்தும் இந்நிலை

எண்சான் வயிறு
எறும்புக்கும்
பசியும் தாகமும் இருக்குமே
பாவப்பட்ட இவர்களை
கவணிக்க மட்டும் மானிடர் இல்லையோ
மனிதர்கள் தான் யாவரும்
இருந்தும் இந்நிலை.

எல்லாமே மாறுது
விண்ணிலே ஏறுது
மனிதமும தூங்குது
அதனால் தான்
இந்த இழிநிலை
இருந்தும் எந்நிலையானாலும.
இந்நிலை இன்னும் மாறலையே..!!

கவிக்குயில் சிவரமணி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates