Social Icons

Samstag, 16. Juli 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய வஞ்சியுன் வதனம்

ஓரவஞ்சம் செய்யுதடி உன்னழகு -என்னில்
ஓசையெழுப்பி கொல்லுதடி எம்மனசு
ஈர நெஞ்சம் இலகுமாடி உனக்கு
ஈர்த்து உன் விழியால் என்னை உருக்கு

கன்னங்கள் கண்டு கற்பனை வருது
கங்கணம் கட்டி கவிதையும் எழுது
வஞ்சியுன் வதனம் வெண்பனி மெழுகு
வன்முறை செய்யுது என்னுள்ளம் அழுது

உமிழும் எச்சில் ஒரு தீர்த்தம் என்பேன் -என்
உடலில் பட்டால் அதை மோட்ஷம் என்பேன்
தமிழில் பேசு நான் கீர்த்தம் என்பேன் - நீ
தயங்கி நின்றால் நான் வருத்தம் கொள்வேன்

பவளமும் தோற்கும் பாவையுன் பற்கள்
பாக்களில் படைத்திட தேடுறேன் சொற்கள்
பூக்களின் மென்மை போல் பூவையுன் இதழ்கள்
பூமியில் உன்போல் பெண்கள் புதுவரங்கள்

               ஆக்கம் வித்தென்றல் 


                                                

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates