Social Icons

Freitag, 15. Juli 2016

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய ஓர விழிப் பார்வையிலே

ஓரவிழிப் பார்வையிலே
உசிர வச்சி தச்சவளே!
சீரவிழ்ந்த பேச்சாலே
சிந்தையினை பிச்சவளே

தேக்குமர தேகம் கொண்டு
தேவதையாய் ஈர்க்குற
பாக்கிறவன் கண்ணில் நின்று
பைத்தியமா ஆக்கிற .

கட்டழகி உன்னை எண்ணி
கனவுலயும் தவிக்கிறேன்.
பொட்டுக்குள்ள சிக்கி சிக்கி
போதையில் மிதக்கிறேன்.

ஒத்தையில் நீயும் நின்று
ஓரக்கண்ணால் பார்க்கிற
மெத்தையில் நான் படுத்தா
மெச்சி என்னைக் கொல்லுற

ரத்தமெல்லாம் சூடேறி
ரகளை பல பண்ணுதடி
பித்தம் வந்து தலைக்கேறி
பிச்சி என்னை மெல்லுதடி.

சத்தமில்லா நெஞ்சுக்குள்ள
சங்கமித்த கங்கைநதி - நீ
சந்தாகி வாழ்க்கையில
சஞ்சரித்த சங்கநிதி

எத்தனையோ நாள் கணக்கா
ஏங்கி நான் காத்திருக்கேன்.
ரத்தினமே ராத்திரியில்
எண்ணத்தில் பூப்பறிக்கேன்.

கொத்தான பூவையல்லாம்
கோர்வையில மாலையாக்கி
அத்தான் நான் சூட்டிவிட
ஆவலாய்த்தானிருக்கன்.

ரத்தினமே வாழ்க்கையில
சங்கிலியா இணைந்திருப்போம்.
முத்தான மாலையைப் போல்
முழுவதுமாய் பிணைந்திருப்போம்.

ஆக்கம் கவிஞர். ஏரூர் கே.

நெளஷாத்


 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates