Social Icons

Samstag, 16. Juli 2016

ஈழத் தென்றல் எழுதிய அன்பிற்கு ஏது எல்லை?

எனக்கோர் வானம், எனக்கென்றே மேகம்
என்னுள் விழும் மழைத்துளி..
எப்போதும் விதைக்கும் கவித்துளி!

அனுபவங்கள் பாடங்கள் என்றால்
அனுதினமும் பரீட்சையே..
அன்றும், என்றும் அகிலம் ஓயும்வரை!

யதார்த்தமான உறவுகள் நாளும்
யன்னல் திறந்து பார்க்கும்..
யாதுமாகி உன்னை அலைக்கழிக்க பார்க்கும்!

உண்மை உணர்ந்த மனதில்
உறவாகும் அன்பு என்றும்..
உன்னை என்றும் உணர்ந்து கொள்ளும்!

அன்பிற்கு ஏது எல்லை?
அணையிட ஆயுதம் இல்லை..
அரவணைக்கும் எண்ணம் கொண்டால்,
ஆ(பேரா)சை அழிந்து போகும்!

ஆக்கம் ஈழத் தென்றல் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates