Social Icons

Dienstag, 19. Juli 2016

ஈழத் தென்றல் எழுதிய என்னில் ஏனிந்த மாற்றம்?

என்னில் ஏனிந்த மாற்றம்?
என்ன விந்தை இறைவா!

கண்களில் ஏனிந்த வெளிச்சம்,
நடையில் காணவில்லை சோர்வு..
உணரவில்லை இதயத்தின் அதிர்வு,
உணர்வினில் கூட தெளிவு..

பற்றிட கொம்பில்லா கிளையின்,
பரிதாப நிலையில் கிடந்தேன்..
சகலமும் நீக்கி இறைவா,
சட்டென தெளிவினை தந்தாய்!

நன்றி உரைப்பேன் உனக்கே!
எல்லாப் புகழும் உனக்கே!!
 
ஆக்கம் ஈழத் தென்றல்  
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates