Social Icons

Sonntag, 26. Juni 2016

'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.26.06.2016, சிறப்பாக நடந்தெறியது.

மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் நேர்த்தியாக நிறைவேறிய 'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா.
சவூதி அரேபியாவில் வசிக்கும் ஈழத்துக் கவிஞர் கவித்தென்றல் ஏரூர் எழுதிய 'இரவுகள் தொலைத்த எழுத்துக்கள்' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது வன்னியின் மாற்றுத் திறனாளிகளுக்கு நல்வாழ்வு அளிக்கும் இனிய வாழ்வு இல்லத்தில் 26.06.2016, ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு இடம்பெற்றது.

நிகழ்வுக்கு முத்துஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபர் கம்பீரக் குரலோன் சி.நாகேந்திரராஜா தலைமை தாங்கினார். தமிழ் மொழி வாழ்த்தினை வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்யாலயாலய மாணவிகள் வழங்கினர். வரவேற்பு உரையினை வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய ஆசிரியர் சுதர்சன் வழங்கினார். ஆசியுரையினை சிவஸ்ரீ நவரத்தினம் வழங்கினார். வரவேற்பு நடனத்தினை வவுனியா சிதம்பரேஸ்வரா நடனாலயப் பள்ளி இயக்குநர் செந்தூர்ச்செல்வன் வழங்கினார். 

வாழ்த்துரையினை கவிதாயினி முல்லை றிசானா வழங்கினார். அறிமுகவுரையினை செல்லமுத்து வெளியீட்டகம் இயக்குநர் யோ.புரட்சி நிகழ்த்தினார். நூலினை இனிய வாழ்வுச் இல்லச் சிறார்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை வாணி வைத்திய நிலைய ஆயுர்வேத வைத்தியர் சிவசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார். வெளியீட்டு நிகழ்ச்சிகளை முல்லைஸ்வரம் இசைக்குழு இயக்குநர் முல்லை யோகேஸ் தொகுத்து வழங்கினார்.

வெளியீட்டு விழாவில் கிடைக்கப்பெற்ற நிதியினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இனிய வாழ்வு இல்ல முகாமையாளர் திருச்செல்வம் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

தொடர்ந்து சிறப்புரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் ஆற்றினார். வெளியீட்டாய்வுரையினை கலாபூசனம் நடராஜா இராமநாதன் வழங்கினார். தொடர்ந்து செல்லமுத்து வெளியீட்டகம் தன்னின் பணிகளைப் பாராட்டி அறிவிருட்சம் துரித கல்வி மேம்பாட்டு சமூக அமைப்பினரால் கெளரவிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்கள் தலைமையில் 'சிரிக்க சிரிக்க சிரிப்பு வரும்' எனும் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்கள் காவலூர் அகிலன், கிளியூர் ரமணன், புங்குடுதீவு தயான் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் இனிய வாழ்வு இல்ல மாணவிகளின் நடனம் மற்றும் இனிய வாழ்வு இல்ல மாணவி தமிழினி அவர்களின் பாடல் என்பனவும் இடம்பெற்றது. கவித்தென்றல் ஏரூர் அவர்களுக்கான பாராட்டுரையினை இனிய வாழ்வு இல்லம் முகாமையாளர் திருச்செல்வம் வழங்கினார்.


நன்றியுரையினை 'ஒரு பூவின் மடல்' கவிநூல் ஆசிரியர் முல்லை தனூஜா ஆற்றினார். தூர தேசத்தில் வாழ்ந்தாலும் ஈழ மண்ணின் மாற்றுத்திறனாளிகளை மனதிருத்தி அவர்களுக்கு சமர்ப்பனமாக கவித்தென்றல் ஏரூர் எழுதிய இந்த நூல் மனிதர்களை நேசிக்கும் ஒரு கவிஞனின் மனமாகவே பலராலும் பாராட்டப்பட்டது.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates