Social Icons

Mittwoch, 29. Juni 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய உன்னது நிலை மறந்திடலாம்

வர்ணம் பூசிய வாழ்க்கையடா
வறுமை பேசும்
வாக்கையடா
நிர்ணயமில்லா இந்த இயற்கையடா
நிம்மதி என்பது இங்கே கிடைக்குமடா

மனிதன் என்பதில் பெருமையில்லை
மனதில் எரித்திடு உன் பொறாமைகளே
புண்ணியம் செய்திடு இந்த பூமியிலே
புன்னகை செய்திடும் உந்தன் வாழ்வினிலே

இன்னல்கள் வாழ்வினில் இடம் பெறலாம்
உன்னது நிலையினை நீ மறந்திடலாம்
நன்மைகள் செய்து நீ வாழ்ந்திடலாம்
நல் மனிதனென்று உலகில் வலம் வரலாம்

முன்னோர் சொன்ன பழமொழி உண்மை
இன்னோர் செல்கிற வழிமுறை என்ன
நல்லோர் மொழிந்த வார்த்தைகள் வெண்மை
நாளும் ஏற்று நடந்தால் உனக்கு நன்மை

உன்னுடல் மண்ணில் புதைந்திடும் - நீ
செய்த நன்மைகள் உன்னை புகழ்ந்திடும்
உண்மை தான் உலகினில் உயர்விடம்
உணர்ந்து நீ வாழ்ந்திடு உயிர்பெறும்


ஆக்கம் வித்தென்றல் 


                                                

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates