Social Icons

Samstag, 25. Juni 2016

ஈழத் தென்றல் எழுதிய உன்னைவிட உத்தமன் கண்டாயோ ..

தொட்டில் தொடங்கி
சுடுகாடு செல்லும் வரை
எத்தனை முகங்கள்..
எத்தனை குணங்கள்? 

குணம் கொண்டோராய்
நடிக்கும் குள்ளநரிகள்
பேய் முகம் மறைத்து,
இனிக்க, இனிக்க பேசியே! 

முதுகில் குத்தும் இராட்சதர்கள்
முகம் காட்டும் கண்ணாடிபோல்,
நீயறிவாய் மற்றவன் யாரென
காலத்தின் கோலமென.. 

சொல்லாதிருக்க இயலவில்லை,
சொல்லி திருத்தவும் முடியவில்லை,
தினம் உயிர் பறிக்கும் காலன்
உன்னைவிட உத்தமன் கண்டாயோ ..

நிதம் நடக்கும் அழிவுக்கு
நீதான் காரணம் என்றால்,
காலனும் உனக்கு எதிரிதான்
கயவனே, மனதை தொட்டு சொல்,

உள்ளொன்று புறமொன்றென்ற
வாழ்வால், உலகுக்கு என்ன பயன்?
உன்னைப் பெற்றவர்கள் ஓர்நாள்
பெருமைப்பட தான் முடியுமா?

ஆக்கம்

ஈழத் தென்றல்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates