Social Icons

Montag, 13. Juni 2016

பொத்துவில் அஜ்மல்கான் எழுதிய தாஜ்மஹளே

காதல்களின் சின்னமாய்
திகழ்கின்றாய்
என் காதலின்
உன்னதம்
தெரியாது

இரு உயிருக்காக
அன்று கட்டியது
தாஜ்மஹால்
என் உயிரிருந்து
இருவுயிர் கலந்து
கட்டியது 
இன்று
என் கல்லறை

யமுனை ஆற்றோடு
கலந்த தாஜ்மஹால்
என் காதலையா
புரிந்து கொள்ள
போகின்றது


உயிரில்லாது உலகை
இரசிப்பவன் நீ
உயிர் இருந்து ஊனமாய்
கிடப்பவன் நான்

என் காதல்
ஞாபகங்களை கூறினால்
தாஜ்மஹால் கூட
சிதைந்துவிடும்
ஒரு கணம்

பல கரங்கள் சேர்ந்து
கட்டியது
அன்று தாஜ்மஹால்
பல ஜென்மங்களாய்
தீராத துன்பங்களால்
கட்டியது என் கல்லறை


ஆற்றோடு மறைந்து
போகும் தாஜ்மஹால் 
கூட
என் கல்லறையில் மிதந்து கொண்டு
போகும் என்
நினைவுகளை சற்று
உற்றுப் பார்த்தால்
ஊமைக் கண்ணீர் விடும்
எனக்காய்

என் ஞாபகங்களை 
காண இன்று
நானும் இல்லை
உன் காதலை காண
மும்தாஜும்
இல்லை
அன்று....




ஆக்கம் பொத்துவில்
                                                                அஜ்மல்கான்


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates