Social Icons

Freitag, 10. Juni 2016

குமுதினி ரமணன் எழுதிய மனதிலே தைத்த முள்.

பள்ளி செல்லப் பார்த்திருந்தான்.
கண்களாளே தூது விட்டான்.
கனவெல்லாம் சிரித்திருந்தான்.

பேசி மெல்ல மனம் தொட்டான்.
காதல் எனச் சத்தியம் செய்தான்.

என் இதயக் கோட்டை ராணி என்றான். 
மாலையிட்டு காலமெல்லாம் 
மங்கையுன்னைப் பார்த்திருப்பேன்
மயக்கம் என்ன பெண்மயிலே.

வெளிநாடு நான் செல்ல விடை
தருவாய் கலங்காதே பொன்மானே.
உள்ளத்தோடு நீ என்றும்.
பிரிவென்பது உடல் ஒன்றே.

கண்ணீரோடு விடைகொடுத்தாள்
கலங்காதே விரைந்துடுவேன்.
சிலகாலம் பதில் இல்லை.
பேச்சு மூச்சு ஏதுமில்லை.

ஊரெல்லாம் சொல்லியழுதாள்.
காதோரம் வந்த செய்தி
இடியாக நெஞ்சுக்குள்.
கண்ணீர் தர கண்களும்
மறுத்துவிட மயங்கி விட்டாள்.

பகையைவிட கொடிய ஆயுதம் 
துரோகம் எனும் கொடிய விசம்.
மணம் முடித்து இரண்டு பிள்ளைகளாம். 
கார் வீடு பணம் என்று 
வசதியான பெரிய இடமாம்.

உயிர் வரையும் உரைத்தது.
உணர்வெல்லாம் ஊமையாக
மனதில் தைத்த முள் என்றும்
மறக்கவில்லை மறையவில்லை

ஆக்கம் குமுதினி ரமணன்  யேர்மனி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates