Social Icons

Sonntag, 19. Juni 2016

கவித்தென்றல் ஏரூர் எழுதிய தந்தையர்தினம்

தந்தை சொல்.....
மிக்க மந்திரமில்லை
தரணியில் வென்றிட ,

இதைவிட தந்திரமில்லை


தந்தையவன் ....
எந்திரமில்லை
சொல் தவறி நடந்தால் 
நீ பிள்ளையுமில்லை

கண் போற்றும் ,
அன்னையின் தெய்வம்
பின் பற்று துன்பமும் இன்பம்

அன்னையும் பிதாவும் 
முன்னெறி தெய்வம்
நீ நன்னெறி கொண்டால் 
உன்னை கொண்டதில் செல்வம்

தானாடாட்டிலும் தன் தசையாடுமே
தாலாட்டிலும் அவன் 
துணை தாலாட்டுமே

தோள் மீது உன் சுமையும் முல்லை
அவன்றின்றி நீயும் இல்லை
செஞ்சோற்று கடனா என்ன?
உன் சோற்றை தருவான் உண்ண..!

பெற்ற பிள்ளை பெருமை தரும்
கற்ற பின்னும் தன் பெயர் கூறும்
கற்பனையில் தினமும் எண்ணும்
உற்ற நண்பன் தந்தையாகும்.!

உன் பெருமை ஊர் முழுக்க சொல்வார்
உனக்கேதும் என்றால் உள்ளுக்குள் அழுவார்

ஆக்கம் வித்தென்றல் 


                                                



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates