Social Icons

Freitag, 10. Juni 2016

சேமமடுவூர் சிவகேசவன் எழுதிய ஆட்காட்டிகளே அவளிடம் சொல்லுங்கள்....

காரிருளில் கானகத்தில் 
கத்துகின்ற ஆட்காட்டிகளே!
அவளிடம் சொல்லுங்கள்...
நான் ஆட்காட்டிகளால்
காட்டிக் கொடுக்கப்பட்டேன் என்பதை...
என்னை அடித்திழுத்துச் செல்லும் போது
நீங்கள் துயில் கலைந்து கத்தியதைச் சொல்லுங்கள்....
கடந்த மாதம் நான் கொடுத்த முத்தமே
இறுதி முத்தம் என்று சொல்லுங்கள்...
அவளது கண்களை ஞாபகப்படுத்தவும்,
பரிசத்தை நினைத்து பூரிப்படையவும் என்னால் இனி
முடியாதென்பதை அறிந்ததால் கத்தும் ஆட்காட்டிகளே....
எனது மூச்சுக் காற்றுக்கூட அவளைத் தொடாது இனி....
அவளிடம் எனக்காக சொல்லுங்கள்....
நான் விரைவில் இருதயம் பிடுங்கப்பட்டு
மூளை சிதைக்கப்பட்டு கொல்லப்படுவேன்
என்பதைச் சொல்லுங்கள்....
அவள் வயிற்றிலிருக்கும் என் குழந்தை
இரத்தத்தில் தமிழுணர்வு பீறிட்டுப் பாய
ஆட்காட்டிகளே.....ஆட்காட்டிகளே.....
என் மனைவி காதில் சத்தமிட்டுச் சொல்லுங்கள்
உன் கணவன் கொடூரமாய் கொல்லப்பட்டான் என்று...


ஆக்கம் சேமமடுவூர் சிவகேசவன்
தமிழ்த் துறை
பேராதனைப் பல்கலைக் கழகம்



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates