Social Icons

Mittwoch, 1. Juni 2016

நெடுந்தீவு அரவிந் எழுதிய பாவசங்கீர்த்தனம்

அந்திம காலங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
அதற்குள் நர்த்தனமாடும்

சீதோட்சணமில்லா
என்மனம் வெறுக்கும் 
பாவங்களுக்கு காசியும்
கங்கையும் கீரிமலையும்
ஏதோ என் பாவங்களை 
கழுவுவதாய் பச்சாதாபம்
தேடுகின்றேன்.


அடித்துப்புழுகும் என் வாய்வார்த்தைகளில்
நம்பிஏமாரும் மனங்களுக்கும் பஞ்சமில்லை.நேத்திரமாய் நான் கொண்டகோலங்களில்
அதற்குப்பின்பும் முதலிருந்தே
அங்கு செல்ல ஆயத்தமாகின்றேன்.

தொடர்கதையாய் நகர்ந்து
கொண்டிருக்கும் பொருத்தமான
பொய்களில் இன்பங்கொண்டாடும் நான் மட்டும் வெந்தபாறையாய்
என் பாவங்கள் நிறைந்திருந்தாலும்
தொட்டுப்பார்க யாருக்கும் தகுதி(யுமில்லை)யளிக்கவில்லை.

ஆக்கம் நெடுந்தீவு
 ara
அரவிந்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates