Social Icons

Mittwoch, 8. Juni 2016

கவி நகுலா சிவநாதன் எழுதிய ஒவ்வொரு விடியல் ‌

சூரிய கதிரொளி சுடர்மிகு பரப்ப
வீரியமாய் உடல் விளைவாக எழ
பாரிய சக்தி பலம் மிகு தந்திட
காரிய சித்தி கனிவாய்ப் பிறந்திடும்

நாளைய விடியலின் நம்பிக்கை ஒளி
நயமாய் மனதில் முளைவிட
காலை வேலைகள் கனிவாய் தொடர
க‌ன்னி முயற்சிகள் முகிழ்ப்பாய் அரங்கேறும்

அமைதியின் விடியலில் ஆனந்தம் பொங்கிட
அடுக்கடுக்காய் ஆயத்தங்கள் நிறைவு பெற
ஐம்புலன் அறிவும் தம்புலன் போட்டியிட
வென்றது மனது வெற்றியின் கழிப்பில்

ஒவ்வொரு விடியலும் தந்திடும் சுகம்
ஒளிமயமாய் இருக்கையில் ஓராயிரம் சுகம்
விடியல்தானே முனைப்பைக் கூட்டிடும்
நொடியில் வாழ்வை நுணுகிக் கற்றிடும்

விடியல் இல்லா வாழ்வு ஏது?
விளக்கு இல்லா ஒளி ஏது? 

கவிஆக்கம் –  நகுலா சிவநாதன்
n-1

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates