Social Icons

Montag, 27. Juni 2016

மீரா குகனின் எழுதிய பெண் என்றால் பலவீனமானவர்களா ?

உயிரை கருவில் சுமந்து, உடலை உருவாக்கி, உணர்வுகளை ஊட்டிக் கொடுத்து, பசிதனை போக்கி பாரினில் நடைபயில சொல்லிகொடுக்கும் ஒரு மிக சிறந்த பிறப்பு பெண் .
ஒரு ஆணினால் இந்த சிறப்பை எத்தனை தான் தாம் வலிமை கொண்டவர்கள் என்று காட்டிக்கொண்டாலும் அவர்களால் முடியாத ஒரு காரியமாகும் . ஆனால் அங்கே ஆண்மகன் தோற்று தான் போகிறான் .
ஒரு ஆண்மகனுக்கு சரி சமமாக நின்று செயலாற்ற கூடிய திறன் பெண்ணிடமே உண்டு . ஆனால் அப்படியிருந்தும் அந்த ஆண்மகனுக்கு தன்னுள்ளே இருக்கும் கர்வமும் எமது சமூகம் கொடுக்கும் தனித்த அந்தஸ்த்தும் பெண்களை ஏனோ பலவீனமானவர்களாக சித்தரித்து அவர்களை அடிமைபடுத்துவதில் இன்பம் காண்கிறது .
உலகநடப்பில் எத்தனை பெண்கள் நாட்டை சிறப்பாக ஆள்கிறார்கள் . நான் வாழும் இந்த ஜேர்மன் நாட்டை வழிநடத்துவதும் ஒரு பெண்ணே .
ஆனால் நம்மிலே வெளியே தெரியாமல் ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் உண்டு . தமிழ் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு இருக்கும் கட்டுபாடுகள் மிக மிக அதிகம் . நம் பெண்ணை காப்பதற்கே நாம் கட்டுப்பாடாக இருக்கிறோம் என்று கூறிகொண்டாலும் அந்த பெண்ணிற்கும் சொந்த விருப்பு, வெறுப்புகள் இருக்கும் என்பதை ஏனோ பல சமயங்களில் மறந்து தான் போய்விடுகிறார்கள் .
ஒரு பெண் என்பவள் ஒரு ஆணைப் போன்றே வாழும் சம உரிமை கொண்டவள் . அவளுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் மறுக்கும் உரிமை அவளுக்கே உண்டு . அதே மாதிரியே எத்தனை பொருத்தம் பார்த்து பெற்றோர் கலியாணம் செய்து கொடுத்தாலும் திருமண பந்தத்தில் கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு இன்றி குழப்பங்கள் உருவாகும் பொழுது பணிந்து போவதும் பெண் தான் .
அவளின் மீதே அந்த சுமையும் சுமக்கபடுகிறது . அதாவது தன் கணவனின் குணாதிசயங்களுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதை தவிர வேறு வழி அவளிடம் இருப்பதில்லை. அப்படியே தன்னை மாற்றிக்கொண்டு பணிவாக அமைதியாக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ முயன்றால் அந்த இயல்பே அந்த கணவனுக்கு அதிகாரத்தை கையிலே கொடுக்கப்பட்டு அங்கு அடிமைத்தனம் நடைமுறையாக்கப்பட விளைகிறது .
„இவள் என் மனைவி, எனக்காக எத்தனயோ விட்டுகொடுப்புகளை செய்கிறாளே“ அந்த செயலை மெச்சி அவளை கொஞ்சம் சந்தோஷமாக வைத்திருப்போம் என்ற எண்ணம் ஏனோ அந்த ஆண்மகனுக்கு வருவதில்லை.
மாற்றாக அதையே பெண்ணின் பலவீனமாக பார்க்கப்பட்டு அவனின் அதிகார தோரணை இன்னமும் உயர்கிறது . இது எத்தனை அநியாயமானது!.
இறைவன் பெண்ணை அழகாகவும் மென்மையாகவும் படைத்திருந்தாலும் அந்த தன்மைகள் தான் அவளின் பலம் என்பதை பெண்ணும் அதே நேரத்தில் ஆணும் மறந்து போகிறார்கள் .
பெண்ணின் அழகை அனுபவிக்க நினைப்பதும் , அவளும் தம்மைபோன்றே ஒரு உயிர் என்பதையும் அங்கே மறந்து போவதே மிக கவலைக்குரிய விடயமாக இருக்கிறது .
இதற்காக ஒட்டுமொத்தமாக ஆணினமே அப்படிப்பட்டவர்கள் என்று நான் கூற வரவில்லை . பல இடங்களில் பல பெண்களும் தமது குணயியல்புகள் மாறி ஆண்களை வருத்தும் சந்தர்ப்பங்களும் நடைபெற்று கொண்டுள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை .
இறுதியாக பொதுவாகவே கோபம் கொண்டால் வஞ்சம் தீர்க்க தயவு செய்து முனைய வேண்டாம். ஒரு உயிரின் வலியை தயவு செய்து ஒரு செக்கன் நினைத்து பார்க்கவேண்டும் . ஏதோ தம்மால் பேச முடியும் என்பதற்காக ஒரு பெண்ணை நினைத்த விதத்தில் நிந்திக்காது அவளை தரக்குறைவான பேச்சுகள் மூலம் மனதை நோகடிக்காமல் ஒரு சக ஜீவனாக பார்த்து மதிக்க கற்றுகொண்டால் போதும் எமது சமூகம் மற்றைய சமூகங்களை விட உயர்ந்து நிற்கும் . 



ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி
 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates