Social Icons

Sonntag, 19. Juni 2016

கவிச்சுடர் சிவரமணி எழுதிய தந்தைக்கு வாழ்த்து

தந்தைக்கு வாழ்த்து 
தவறாது சொல்வேனே
மறைந்த தெய்வங்களுக்கு 
மனதார சொல்வேனே

அன்னையில்லை தந்தையில்லை 
அவனியிலே உற்ற சொந்தமில்லை
பற்றறுக்கவில்லை ஆனாலும் 
பயணம் செய்கிறேன் 
பற்றுக்கொண்ட உறவினால்

அம்மாக்கு செல்லப்பெண் 
அப்பாக்கு வாயாடிப்பெண் 
அன்பான குடும்பத்திலே 
அகமகிழ வாழ்ந்ததொருகாலம்

இந்நேரம் நினைத்ாலும் 
இழப்புக்கள் வலிக்கிறது 
எந்நேரம் நான் துயில்கொள்வேன் 
மீளாது வந்து உமைச்சேர ...

அப்பா.....
நீங்கள் போனபின்னே 
அம்மா தானே என் ஆதாரம் 
அவவையும் இழந்தபின்னே 
அன்புமகள் படும் துயரம் 
அங்கிருந்து அறிவீரோ

ஆசி எனக்கு போதுமென்று
அவசரமாய் சென்றீர்கள்
அப்பாக்கு வாழ்த்து மட்டும் போதுமென்று
அன்புமகள் விடுவேனோ

அப்பாக்கள் இல்லாது 
மானிடமே இருக்காது 
நல்லதொரு அப்பாவை நாமும் இழக்கலாகாது


உலகில் உள்ள அப்பாக்களை 
உளமார வாழ்த்துகிறேன் 
உள்ளன்பு நேர்த்தியுடன் .
உயர்வுபெற்று வாழ்கவே !!!


சிவரமணி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates