Social Icons

Dienstag, 17. Mai 2016

மீரா குகனின் விடிவு இனி எம் கையில்

காலங்கள் மாறுகின்றன 
காட்சிகள் மாறுகின்றன 
ஆட்சிகள் மாறுகின்றன

ஆனாலும் மாறாத காயம் ஒன்று தான் 

அது முள்ளிவாய்க்கால் சோகம் மட்டும் தான்

கோரத்தின் காட்சியும் அதுவே 
கொடுங்கோலின் ஆட்சியும் அதுவே 
அதர்மத்தின் சாட்சியும் அதுவே, அய்யோ, 
பரிதாபத்தின் காட்சியும் அதுவே

பட்ட துயருக்கு நீதி வேண்டும் 
பலி கொடுத்த உயிருக்கு நியாயம் வேண்டும் 
இழந்த இழப்புகளுக்கு நீதி வேண்டும் 
நாம் தலை நிமிர்ந்து வாழ வழி வேண்டும்

நம் செல்வங்கள் வாழ வேண்டும் 
நம்பிக்கையுடனே ஒன்று சேர வேண்டும் 
நம் வாழ்வில் விடிவொன்று உருவாக வேண்டும் 
நம் தமிழீழ கனவும் மலர வேண்டும்

ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி




Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates