Social Icons

Donnerstag, 26. Mai 2016

ரதிமோகன் எழுதிய பொழிந்திடுமா மாமழை..

கிழக்கில் உதயமும் 
மேற்கிலே அஸ்தமனமும்
மாற்றங்கள் இல்லாத
பொழுதுகளின் பிரவேசம்
பொசுங்கிபோன இதயத்தில்
பொழிந்திடுமா மாமழை..

வலுவிழந்த சிறகுகள்
பறத்தல் எத்தனிப்புக்கள்
தொடுவான கதையாகுமா
கானல் நீரின் நிலையாகுமா...

பாலைவனத்து மேகங்களின்
பன்னீர்த்தூறலுக்காய்
ஒற்றைகால் கொக்காகி
காத்திருந்த கனவுகள்
கலைந்துதான் போயிடுமா..

ஆக்கம்  கவிஞை
ரதிமோகன் 


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates