Social Icons

Sonntag, 8. Mai 2016

-வன்னியூர் செந்தூரனின்- அம்மா

என் பிரபஞ்சத்தில்
தூங்காத சூரியக்கீற்று
ஓசோனாய் அமைந்தாள்

ஒட்சிசனும் தந்தாள்


வானவில்லின் வளைவில்
வீணடித்த நேரத்தில்
நான் மறந்தபோதிலும்
மாறாத மகாவெளிச்சம்

சிவப்பிழந்த அவள்
வளைநுதலில் சில
சுருக்கு வந்தபோதும்
வெளுப்பிழக்காத தங்கம்

வறுமை வாட்டத்திலும்
வளத்தின் நீட்டத்திலும்
வளையாத நெடுஞ்சாலை
வற்றாத பாசச்சமுத்திரம்

மற்றவரெல்லாம் மகனை
வித்தகனென்ற போதும் 
கெட்டவனென்ற போதும்
கொட்டமடிக்காத குற்றாலம்

மனிதம்செத்த வெளியெங்கும்
மரணிக்குதம்மா உணர்வுநொடி
மிச்சமான கடன்தீர்க்க தாயே
மீண்டுமென்னோடு பிறவியெடு

 ஆக்கம் கவிஞர்-வன்னியூர்
செந்தூரன்-

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates