Social Icons

Montag, 2. Mai 2016

சுதர்சன் எழுதிய இருப்புக்குள் உனை தேடி


இருண்டு போன உலகில்
வாழ்வதாய் எனையே
நொந்த காலங்கள் 
ஆயிரம் 
ஆனால் உன் இருப்பு 
நிதந்தரம் என்பதை 
நான் அறியாத 
மூடனானேன்
என்னோடு ஒட்டிப்பிறந்த
குழந்தை போல் 
பிரியாமல் 
இருப்பதாய்
அறியவில்லை தான்
ஆலம் பாலில்
பல் தேய்த்து
வெண்மை கொண்ட 
உன் பற்கள் 
மட்டுமே வெண்மை
மற்றெதெல்லாம்
கருமையான
கும்மிருட்டு அதுதான்
ஏனோ 
என் அக்காலத்தில்
நேராக பதிலுரைப்பாய் 
தற்காலத்தில் ஏன் 
எனையே தேட 
வைக்கிறாய்
இறப்பில் உனக்கு 
அவ்வளவு பிரியமா
அதிலும் என் 
ரணமான இறப்பில் 
அலாதி இன்பமா சொல்
தசைகளை 
மென்று விட துடிக்கும் 
உனை கேட்கிறேன்
என்புகளையும்
சுவைத்து பார்
எதுகை மோனைகளின்
இடர்கள் புரியும்
இட்டதெல்லாம்
இடுகையாக
நிலை நிறுத்த
எனை பக்குவாக்க
தவிக்கும் போதெல்லாம்
நீதான் எனக்கு
முதல் தடை 
இருந்தும்
கேட்டேனா
ஐயகோ!
உனக்கு எங்கே 
புரியப்போகிறது
நீ தான் என் 
நினைவாயிற்றே
விம்பம் இல்லா
நிழலிடம் 
உரைத்து என்ன
பயன் இருந்தும்
நீ மட்டுமே என்னுள்
நிரந்தர இருப்பானாய்
நினைவே

ஆக்கம் சுதர்சன்






Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates