Social Icons

Sonntag, 8. Mai 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநிதியின் அம்மாக்களுக்கு என் வாழ்த்துக்கள்..!


நாவினில் உன்
நாமம்
உச்சரிக்காத
நாளேது.!
நினைப்பினில் நீ
இல்லாத நாளேது.
என்னோடு உன்
ஜீவன் வாழ்வதால்
கனவில் வருவதில்லை
லப்டப் எனும்
இதய ஒலி நீயல்லவா...!


அம்மாக்கள் தினம்
மனத்தில் வாழும்
உந்தனுக்கு இன்று
தினம் என மகள்
உரைத்தாள். உன்
அம்மாவை நீ வாழ்த்து
என் அம்மாவை
நான் ஆராதிக்கின்றேன்.
என் தமிழ் துணை
கொண்டு கோலம்
போடுகின்றேன்.
உயிர்மெய்யாய்
உருத் தந்தவளே
என் நாளும் என் வாழ்த்தும்
ஆரதனையும்.


 ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி


Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates