Social Icons

Montag, 23. Mai 2016

ஈழத்துப்பித்தன்எழுதிய அழகழகா வாழைமரம்


அழகழகா வாழைமரம்
அடுத்தடுத்து குலை சாய்சிருக்கு
விதம் விதமாய் உருவம் கொண்டு
விரும்பும் சுவையில் பழுத்திருக்கு
மாப் பிடிப்பாய் கப்பல்
மனம் பிடித்த இதரை
தேன் இனிக்கும் கதலி - தின்னத்
தெகிட்டாத செவ்வாழை
வெட்டிப் பொரித்துண்ண 
விருந்து சிறக்கும் மொந்தனதால்
இத்தனை இனம் இருக்கு எம் தேசத்தில்
அத்தனையும் தொலைத்தோம்
அகதிகளாய் அடுத்தவன் நாடு புகுந்து
அன்னியமண் வாசம் நுகர்வதனால்...


ஆக்கம்


ஈழத்துப்பித்தன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates