Social Icons

Sonntag, 22. Mai 2016

ஜெசுதா யோ எழுதிய கடந்து வந்த பாதையை... என்றும் மறவாதே..

காலங்கள் மாறலாம்
காட்சிகள் கூட மாறலாம்
கடந்து வந்த பாதையை
மறப்பது ஞாயமா,.?

பாசங்கள் மாறலாம்
வேஷங்கள் போடலாம்
செய்நன்றி மறத்தல்
உன்னை நீ மறந்ததற்கு சமனல்லவா...?

உன்னை நம்பியோர்க்கு
நல்லது செய்ய வேண்டாம் 
தீங்காவது செய்யாதிரு
அதுவே உனக்கு சிறப்பல்லவா...//

பொய்கள் பேசி 
போலிமுகம் காட்டி
அன்பென்னும் மாய வலையில்
மனதைதிருடுதல் கூட 
உன் பாவத்தின் ஒரு பாதியே...//

காரணம் ஆயிரம் 
கற்பிக்க நினைக்காதே
உன்னை நம்பியவர்களை
நடுத்தெருவில் நிறுத்தாதே..//

பாவத்தின் இருப்பிடம்
பிறர் கண்ணீரின் உறைவிடமாய்
நாளை நீ இருக்காதே...//

நல்லதை நினை
நல்லதை செய்
நாளை உன் வழித்தோன்றலும்
வாழும் சிறப்பாகவே...//

ஆக்கம் ஜெசுதா யோ

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates