Social Icons

Montag, 30. Mai 2016

கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய இதயவானம்


என் மன வான் கலக்கத்தில் 
ஏதோ துடிப்பு இதயத்தில் 
ஆசையின் பாதையில் 
அணிவகுத்ததால்
அந்தரத்தில் காற்றாடுது இதயம்

சுற்றியடிக்கும் சுழல்காற்று
சுகம் பெற மறுக்கும் இதயம் 
சுழலாய் இழுக்கும் துன்பம் 
சுகப்படுமா என் இதயம்

நம்பிக்கை தளர்ந்தபோதும் 
நடைபயில நினைத்த கால்கள்
உறவென நினைத்த உள்ளங்கள் 
ஊதிப்பார்ப்பது கொடுமை

வேதனை என்பது வேடிக்கை அல்ல 
வேடமிட நான் நடிகையுமல்ல 
பூஞ்சை மனமும் நஞ்சை இதயமும் 
எனக்கே சொந்தம் 
அதனால் தானோ கலங்கிய வானும் கதறும் மனமும் எனக்கே பரிசானதோ ??
ஆனதோ???

சிவரமணி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates