Social Icons

Samstag, 7. Mai 2016

வன்னியூர் செந்தூரனின் பல வருடங்களாக சந்திக்காத நண்பனின் சிந்திக்கவைத்தவார்த்தைகள்


நீண்டநாட்களின் பின் மத்தியான வெய்யில் மண்டையைப்பிளக்க மன்னார்வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தபோது தாகமாக இருந்தது. ஒரு சோடாகுடித்தால் சூடு குறையுமென்று ஒரு கடைக்குள் ஒதுங்கினேன் .. என்ன ஆச்சரியம்..! பல வருடங்களாக சந்திக்காத , இருக்கிறானோ ..?இல்லை .இறந்திட்டானோ ..?என நான் நினைத்த பழைய கிளிநொச்சி நண்பன் . அதிர்ச்சியோடு ஆனந்தமும் ஒட்டிக்கொண்டது. 

அந்தக் கடையே அவனுடையது என்றான். நலம் விசாரித்து மகிழ்ந்தான். அவனது தந்தையும் தாயும் மருத்துவர்கள். இவனும் என்னோடு விஞ்ஞானப்பிரிவில் உயர்தரத்தில் கற்றவன் சிறிது காலம் . நல்ல கெட்டிக்காரன். நீண்டநேரம் உரையாடினோம். அப்போது கேட்டேன் "ஏன் நண்பா இந்த வியாபாரத்தை தேர்ந்தெடுத்தாய் தொடர்ந்து படித்திருக்கலாமே என்று.." சிரித்தபடி பதில் தந்தான் .. "நான் வாழ்க்கையைப் படிக்கிறேனடா , அறிவுக்கு போதுமான ஏட்டுக்கல்வி எனக்கிருக்கிறது" என்றபடி சொன்னான் "கலியுகமடா இது ,போலிகளின் போகம் என்றான் . தனது அனுபவங்கள், வலிகள், தோல்விகள் ,சரிவுகள் எல்லாவற்றையும் விரத்தியை திறந்து சிரித்தபடி சொன்னான்.

 அவனின் கருத்துக்கள் அத்தனையும் அர்த்தமுள்ள வடிவங்கள் . ஆணியாய் ஏறியது மனதில் . என்னையும் ஒப்பீடு செய்தேன் . உறவுகளையும் ஒப்பீடு செய்தேன். முகநூல் கூட மனத்திரையில் ஓடியது . இதில் எத்தனையாயிரம் நட்புக்களைச் சேர்த்தாலும் எத்தனை நட்புகள் உண்மையான உறவுகள் ..? என்ற வினாவும் எழுந்தது . 

அவன் சொன்னது போல எனக்காக வாழ்வோம், என்னை மதிக்கின்ற விசுவாசமான பாசமான உறவுகளுக்காக மட்டும் வாழவேண்டுமென எண்ணிக்கொண்டேன் . அதனால் நட்பிலுள்ள இலக்கியப்போலிகளையும் , போலி நட்புகள் பலரையும் நட்பு வட்டத்திலிருந்து நீக்கவுள்ளேன். இனியவது உண்மையான உறவுகளோடு நகரட்டும் நாட்கள்


உன்மையில்  உரசல் கண்ட  வன்னியூர் செந்தூரன்




Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates