Social Icons

Donnerstag, 7. April 2016

கவிஞை நகுலா சிவநாதனின் வைகறைப்பொழுது













வைகறைப்பொழுதிலே வானத்தின் விடியல்
சொல்லிட முடியாத சுகமான பிரசவம்
மெல்லிட முடியாத மேகத்தின் அழகு
மேனியை சுகமாக்கும் சூரிய கதிர்கள்

வைகறைப்பொழுது வருகை
வானத்தின் வண்ணத்தால் புலர்வு
எண்ணிட முடியாத ஒளிக்கீற்றுகள்
என்றென்றும் பகலின் உயிர்த்துடிப்புகள்
பகலின் வரவும் பார்ப்பேரரின் மகிழ்வும்
காலையின் உதயமும் காதலின் துளிர்ப்பும்
உயிரினத்தில் மகிழ்வும் உளமார அமைதியும்
உள்ளத்துள் உற்சாகமும் உணர்ந்திடும் பொழுது
வைகறைப்பொழுது வளமான நற்பொழுது
அமைதியின் விடியலில் பூத்திடும் நற்பூக்கள்
அதிகாலைச்சூரியன் அணைத்திடும் வண்ணம்
ஆகாயதாமரையும் அழகாக பூத்திடும்
ஆக்கம் கவிஞை nநகுலா சிவநாதனின்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates