Social Icons

Samstag, 30. April 2016

கவிஞர் கீழ்கரவை குலசேகரனின் பஞ்சம் போக்கும் தொழிலாளி !,

தொழிலாளி எம் கூட்டாளி !
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி 
நித்தம் உழைப்பான் தொழிலாளி !
உற்ற நண்பன் அவனே ! இந்த 
உலகம் உய்ய வழிகாட்டி ! [நெற்றி ]

உண்ண உணவும் ,உடுக்க உடையும் 
அவனின் உழைப்பால் உருவாகும் !
எண்ணிப் பார்த்தால் எல்லோர் வாழ்வும் 
அவனின் உழைப்பால் உயர்வாகும் ![நெற்றி]

பாடுபட்டு உழைக்கும் அவனே 
பஞ்சம் போக்கும் தொழிலாளி !,
நாடும் ,ஏடும் போற்றும் அவனே 
நமது இனிய கூட்டாளி !! [நெற்றி


ஆக்கம் கவிஞர்
கீழ்கரவை குலசேகரன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates