Social Icons

Samstag, 16. April 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் கதை சொல்லவா..!
















எண்ணங்களால் ஏற்றிய
காதல் கதை சொல்லவா.!
வணங்களால் தீட்டிய
வாழ்க்கை கதை சொல்லவா.
சுடர் விட்டெரிந்து சுகம்
சேர்த்த கதை சொல்லவா.!

உயிராய் நேசித்த உன்னத
உறவுகளின் கதை சொல்லவா..
சோகங்கள் சூழ சுமையோடு
தாங்கிய எங்கள் தாகங்களின்
கதை சொல்லவா.தமிழர்
கதை சொல்லவா..

சுக போகங்கள் மறந்து
மண்ணும் மக்களும் பெரிதென
எண்ணிய எங்கள் வராலாற்று
காதல் கதை சொல்லவா..!
விடியல் ஒன்றே மூச்சாகி
விடுதலையே குறியாகி
உணர்வுகளை உறைய வைத்த
உண்மைக் கதை சொல்லவா..!

முள்ளி வாய்க்கால் முடிவாக
முயன்ற வரை போராடி
புண்ணாகிப் புழுவாகித் துடித்த
துயரக் கதை சொல்லவா.....
வேதனையில்லா வரலாறு அது..
வேடிக்கையான வரலாறுண்டு.
வேதனையாக்கிய வரலாறு

போராளிகளின் கதை. உங்களால்
கைவிடப்பட்ட வீரர்களின் கதை
வலிக்கும் வரலாறு இது..
விரட்ட விரட்ட வீதிக்கு வீதி
மடிப் பிச்சை எடுக்கும் கதை
மானத் தமிழன் கூனிக் குறுகிடும்
கதை.! கண்ணீர் வேண்டாம்
வாழ வழி சொல்லுங்கள்.
வகை செய்யுங்கள். கரம் கொடுங்கள்.

ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates