Social Icons

Donnerstag, 7. April 2016

மீரா குகனின் நிஜம் என்றுரைத்த பொய்மைகள்












பொய்மையின் விதையில் 
நிறம் மாறும் பூச்செடிகள்
நீரூற்றி செடி வளர்த்த
விலையில்லா
வினை மரங்கள் 

பலகிளைகள் கிளைத்தாலும்
விழுதுகளாய் நெளிந்தாலும்
பசுமை போர்வையில்
பச்சோந்தியாய்
நிறம் மாறி
வேர் இல்லாமல்
தடம் நடுங்கி
வாய்மையின் முன்னே
மண்டியிட்டு தடுமாறி
நாள் முடிவில்
மரணிக்கும்
நிஜம் என்றுரைத்த
பொய்மை செடிகள்


ஆக்கம் மீரா குகன்        ஜெர்மனி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates