Social Icons

Dienstag, 26. April 2016

‎ஈழத்துப்பித்தனின்‬ பனி பூப்பெய்தும் காலம்

சித்திரையில் கதிரோன்
சிரித்திடுவான் நாளும் என
எண் திசையும் விழி வைத்து
எதிர் நோக்கிக் காத்திருந்தால்
பெண்ணவள் நாளும் விழி உடைத்து
பெய்திடும் கண்ணீர் போல்
மூக்கை சிந்தி வான மகள்
முகம் கறுத்துக் கிடக்கிறாள்


புவி பூப்பெய்தும் காலமதில் - பனி
பூத்து சொரியுது இங்கு
காலம் தப்பி காலம் மாறி
காலாகாலமா இருந்த 
கால நிலை மாறுவது
காலத்தின் கோலமன்றோ...



ஆக்கம்
ஈழத்துப்பித்தன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates