Social Icons

Mittwoch, 27. April 2016

கவித்தென்றல்‬ எழுதிய பார் மகளே உலகை...

ஆராரோ ஆரிரரோ

ஆகாய வெண்ணிலவே
அழகே என் கண்மணியே
ஆனந்தமாய் நீ கண்ணுறங்கு


வடிவமைத்து பொய்களும் சொல்லிடுவார்
வாழும் வழியதை கண்ணில் மறைத்திடுவார்
தெளிவோடு நீயிரு கண்மணியே 
தாலாட்டு பாடுறேன் உனையெண்ணியே.

கல்வியே உன் வாழ்வின் வழிகாட்டி
நான் வளர்பேன் அதை தினம் ஊட்டி
எதிரியிடம் போடனும் நீ போட்டி
சீறி பாய நீ ஆகிடு ஈட்டி..

கண்மணியே கண் திறந்து பாரு உலகை
உன்னை சுற்றி இருப்பதெல்லாம் மாயை
உலகில் உன் தெய்வமாய் வாழும் தாயை
உணர்வோடு காத்திடுவாயே..
கண்மணியே கண்ணுறங்கு


ஆக்கம்
கவித்தென்றல் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates