Social Icons

Freitag, 15. April 2016

கவிஞர் எழுத்தாளர் தயாநியின் பேசும் இயந்திரங்கள்...!
















பத்து தலை இராவணண்.
பன்னிரண்டு கை வேலன்
இன்னும் பல அதிசயங்கள்
இதிகாசத்தில் புராணங்களில்
படித்து மனனம் செய்து
பரீட்சையில் தேறியவர்கள் ..!

படித்தும் பட்டம் பெற்றும்
பண்பாடுகளை அறிந்தும்
அறியாமல் அலையும் எம்
கண்களுக்கு தென் படாத
பத்துக்கும் மேற்பட்ட கரங்களின்
சொந்தக்காரர் தாயும் தாரமும்
என்பதை மறக்கின்றோமா
மறந்து விடுகின்றோமா
மனச் சாட்சிகள் பேசட்டும்..!
ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநி

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates